Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by Unknown in ,    



ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுதிதியுள்ளது.
 
இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
"நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் வேளையில், ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு அந்நாடு முயற்சிக்கலாம்.
 
எந்தச் சூழ்நிலையிலும் அந்நாட்டின் வலையில் சிக்கி நாம் இரையாகிவிடக் கூடாது. இதை நமது அரசு மனதில் கொள்ள வேண்டும்.
 
இந்த விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக மனிதத்துவக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் இணைய வேண்டும் என்பது போன்ற அவர்களின் தந்திரமான பேச்சுக்கு நாம் உடன்பட்டுவிடக் கூடாது.
 
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக எந்த சர்வதேச நாடு அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தாலும், அந்த நாடு ஐ.நா வின் ஒப்புதலை பெற்றாக வேண்டும்.
 
அதை மீறி செயல்படும் நாடு நீதிக்கு எதிராக செயல்படுவது போலாகும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: