Sunday, December 14, 2014
நடிகர் ரஜனிகாந்த் 65 வது பிறந்த தின விழா மற்றும் அவர் நடித்து நேற்று வெளியான லிங்கா திரைப்படம் தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பூர் அவினாசி ரோடு காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 1000 குழந்தைகளுக்கு பால்,பிரெட் பிஸ்கட் ஆகியன வழங்கும் விழா திருப்பூர் புது பஸ் நிலையம் பகுதியில் உள்ள சக்தி தியேட்டர் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கி 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரஜனி படம் போட்ட மஞ்சள் பையில் பால்,பிரெட் பிஸ்கட் ஆகிய உணவு பொருட்களை போட்டு வழங்கினார். நிர்வாகிகள் தென்றல் என்கிற தென்னவன்,அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி கவுரிகனகு வரவேற்று பேசினார். விழாவில் நிர்வாகிகள் ராஜேஷ், தங்கராஜ், ரகுராமன், தனபால், கென்னடி, கண்ணம்மாள், சுலோச்சனா, ராஜாத்தி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் பூவாத்தம்மாள் நன்றி கூறினார். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரஜனி ரசிகர்களுக்காக பிரத்யேகிதமாக காலை 4 மணிக்கே லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்காக தியேட்டர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் ஏராளமான ரஜினி நடித்த லிங்கா பட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது அப்பகுதி முழுவதும் பின்னர் 7 மற்றும் 11 மணி,மதியம் 3, மாலை 6, இரவு 10 மணி என 6 காட்சிகள் காட்டப்பட்டது. அப்போது ரஜனி ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடன் வந்து படத்தை ரசித்து பார்த்து சென்றனர். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியதாவது: எங்கள் சங்கம் சார்பில் கடந்த 20 வருடங்களாக ரஜனி பிறந்த நாள் கொண்டாடிவருகிறோம். அப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறோம்.இந்த ஆண்டு 1000 குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கியுள்ளோம்.லிங்கா படம் மிக அருமையாக,நன்றாக வந்துள்ளது. ரஜனிக்கு பெயர் சொன்ன பாட்சா படத்தை விட 1000 மடங்கு இந்த படம் நன்றாக வந்துள்ளது. இதில் தன்னுடைய நிலைப்பாடு, மனதில் உள்ளதை ரஜனி கூறியுள்ளார். இந்தப்படம் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். அதனால் ரஜனி 100 ஆண்டுகள் எந்த நோயும் வராமல் வாழவேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...


0 comments:
Post a Comment