Sunday, December 14, 2014
நடிகர் ரஜனிகாந்த் 65 வது பிறந்த தின விழா மற்றும் அவர் நடித்து நேற்று வெளியான லிங்கா திரைப்படம் தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பூர் அவினாசி ரோடு காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 1000 குழந்தைகளுக்கு பால்,பிரெட் பிஸ்கட் ஆகியன வழங்கும் விழா திருப்பூர் புது பஸ் நிலையம் பகுதியில் உள்ள சக்தி தியேட்டர் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கி 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரஜனி படம் போட்ட மஞ்சள் பையில் பால்,பிரெட் பிஸ்கட் ஆகிய உணவு பொருட்களை போட்டு வழங்கினார். நிர்வாகிகள் தென்றல் என்கிற தென்னவன்,அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி கவுரிகனகு வரவேற்று பேசினார். விழாவில் நிர்வாகிகள் ராஜேஷ், தங்கராஜ், ரகுராமன், தனபால், கென்னடி, கண்ணம்மாள், சுலோச்சனா, ராஜாத்தி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் பூவாத்தம்மாள் நன்றி கூறினார். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரஜனி ரசிகர்களுக்காக பிரத்யேகிதமாக காலை 4 மணிக்கே லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்காக தியேட்டர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் ஏராளமான ரஜினி நடித்த லிங்கா பட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது அப்பகுதி முழுவதும் பின்னர் 7 மற்றும் 11 மணி,மதியம் 3, மாலை 6, இரவு 10 மணி என 6 காட்சிகள் காட்டப்பட்டது. அப்போது ரஜனி ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடன் வந்து படத்தை ரசித்து பார்த்து சென்றனர். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியதாவது: எங்கள் சங்கம் சார்பில் கடந்த 20 வருடங்களாக ரஜனி பிறந்த நாள் கொண்டாடிவருகிறோம். அப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறோம்.இந்த ஆண்டு 1000 குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கியுள்ளோம்.லிங்கா படம் மிக அருமையாக,நன்றாக வந்துள்ளது. ரஜனிக்கு பெயர் சொன்ன பாட்சா படத்தை விட 1000 மடங்கு இந்த படம் நன்றாக வந்துள்ளது. இதில் தன்னுடைய நிலைப்பாடு, மனதில் உள்ளதை ரஜனி கூறியுள்ளார். இந்தப்படம் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். அதனால் ரஜனி 100 ஆண்டுகள் எந்த நோயும் வராமல் வாழவேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...


0 comments:
Post a Comment