Sunday, December 14, 2014
பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவை நடத்தி வருகின்றனர். இதன் 12-ஆவது ஆண்டு புத்தகத்திருவிழா வருகின்ற 2015-ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகின்றன.
இதற்காக புத்தகக்கண்காட்சி வரவேற்புக் குழுவின் அமைப்புக்கூட்டம் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ட்ரிபிள் எக்ஸ். குப்புசாமி தலைமை தாங்கினார்.பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். புத்தகக்கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார்அகமது ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் புதிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழுத்தலைவராக ஆர்.ஏ.ஜெயபால், செயலாளராக செ.முத்துக்கண்ணன், பொருளாளராக அ.நிசார்அகமது, மேலும், 29 பேர் துணைத்தலைவர்களாகவும், 32 பேர் உதவிச்செயலாளர்களாகவும்1 32 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தொழிலதிபர்கள் எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத்அலி, பிரிண்டிங் குமாரசாமி, திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர்.ஏ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எம்.தங்கராஜ், யுனிவர்சல் கல்வி நிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
0 comments:
Post a Comment