Sunday, December 14, 2014
பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவை நடத்தி வருகின்றனர். இதன் 12-ஆவது ஆண்டு புத்தகத்திருவிழா வருகின்ற 2015-ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகின்றன.
இதற்காக புத்தகக்கண்காட்சி வரவேற்புக் குழுவின் அமைப்புக்கூட்டம் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ட்ரிபிள் எக்ஸ். குப்புசாமி தலைமை தாங்கினார்.பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். புத்தகக்கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார்அகமது ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் புதிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழுத்தலைவராக ஆர்.ஏ.ஜெயபால், செயலாளராக செ.முத்துக்கண்ணன், பொருளாளராக அ.நிசார்அகமது, மேலும், 29 பேர் துணைத்தலைவர்களாகவும், 32 பேர் உதவிச்செயலாளர்களாகவும்1 32 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தொழிலதிபர்கள் எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத்அலி, பிரிண்டிங் குமாரசாமி, திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர்.ஏ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எம்.தங்கராஜ், யுனிவர்சல் கல்வி நிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...

0 comments:
Post a Comment