Sunday, December 14, 2014

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி சகாயம் கடந்த 3–ந்தேதி முதல் மதுரையில் விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கிரானைட் தொழில் முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் இதுவரை 160–க்கும் மேற்பட்டோர் புகார் மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.
மேலும் வருகிற 15, 16 ஆகிய தேதிகளிலும் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம் என்று சகாயம் தெரிவித்துள்ளார்.
வருகிற 15–ந்தேதி மதுரை வரும் சகாயம் 2–ம் கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட சகாயம் முடிவு செய்துள்ளனர். இது கிரானைட் குவாரி அதிபர்கள் மத்தியில் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி அதிபர்கள் 86 பேருக்கு சம்மன் அனுப்பி அபராதம் விதிப்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். குவாரி அதிபர்கள் மற்றும் அவரது வக்கீல்கள் கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூலம் பட்டா நிலங்கள் கீழவளவு, இ.மலம்பட்டி பகுதியில் பட்டா நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 வழக்குகள் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மேலும் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பி. கிரானைட் நிர்வாகம் மீது மட்டும் இதுவரை 65 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment