Sunday, December 14, 2014

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி சகாயம் கடந்த 3–ந்தேதி முதல் மதுரையில் விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கிரானைட் தொழில் முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் இதுவரை 160–க்கும் மேற்பட்டோர் புகார் மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.
மேலும் வருகிற 15, 16 ஆகிய தேதிகளிலும் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம் என்று சகாயம் தெரிவித்துள்ளார்.
வருகிற 15–ந்தேதி மதுரை வரும் சகாயம் 2–ம் கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட சகாயம் முடிவு செய்துள்ளனர். இது கிரானைட் குவாரி அதிபர்கள் மத்தியில் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி அதிபர்கள் 86 பேருக்கு சம்மன் அனுப்பி அபராதம் விதிப்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். குவாரி அதிபர்கள் மற்றும் அவரது வக்கீல்கள் கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூலம் பட்டா நிலங்கள் கீழவளவு, இ.மலம்பட்டி பகுதியில் பட்டா நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 வழக்குகள் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மேலும் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பி. கிரானைட் நிர்வாகம் மீது மட்டும் இதுவரை 65 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகே...
0 comments:
Post a Comment