Friday, December 12, 2014
பின்னல் புக் டிரஸ்ட் - பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றன. திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக இது தடம் பதித்துள்ளது. இதன்படி 12வது ஆண்டாக 2015 சனவரி 30 முதல் பிப்ரவரி 8ம் தேதி முடிய பத்து நாட்கள் இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டிசென்டரில் இந்த புத்தகக் கண்காட்சிக்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ட்ரிபிள்எக்ஸ் குப்புசாமி தலைமை வகித்தார். பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்றார். புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார் அகமது ஆகியோர் விளக்கினர்.
இதைத் தொடர்ந்து புதிய வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழுத் தலைவர் - ஆர்.ஏ.ஜெயபால், செயலாளர் - செ.முத்துக்கண்ணன், பொருளாளர் - அ.நிசார் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 29 பேர் துணைத் தலைவர்களாகவும், 32 பேர் உதவிச் செயலாளர்களாகவும், இவர்களுடன் 132 பேர் கொண்ட வரவேற்புக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த விழாவில் முந்தைய புத்தகக் கண்காட்சிகளின் தலைவர்களாக செயல்பட்ட அரிமா எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத் அலி, பிரிண்டிங் குமாரசாமி மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்கம் தலைவர் டாக்டர் ஆ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்விநிறுவனங்களின் தாளாளர் தங்கராஜ், யுனிவர்சல் கல்விநிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக செ.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...

0 comments:
Post a Comment