Friday, December 12, 2014
அந்நிய முதலீட்டை 49 சதமாக உயர்த்த மோடி அரசு முடிவு: திருப்பூரில் எல்ஐசி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கண்டித்து அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டுத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அடுத்த வாரம் இம்மசோதாவை தாக்கல் செய்யவும் மோடி அரசு தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் அதற்கு உடந்தையாக உள்ளது. எனவே இதை எதிர்த்து, காப்பீட்டுத் துறையைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளைச் செயலாளர் கே.ரகுநாதன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கண்டனம் முழங்கினர். மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த முடிவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி காப்பீட்டு கழக முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கே.ஜெயராமன், பி.சி.நரசிம்மன் ஆகியோர் உரையாற்றினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment