Friday, December 12, 2014

On Friday, December 12, 2014 by farook press in ,    
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும், தேவையான தொலைத்தொடர்பு கருவிகள், உபகரணங்களை பிஎஸ்என்எல்க்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பிரதான தொலைபேசி நிலைய வாயிலில் வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் எஸ்.என்.இ.ஏ. நிர்வாகி பழனிவேல்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் என்எப்டிஇ செயலாளர் ஜெகநாதன், எப்என்டிஓ மாநிலத் துணைச் செயலாளர் தனபதி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், எஸ்என்இஏ முன்னாள் நிர்வாகி பா.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக என்எப்டிஇ சார்பில் ஆண்டனி மரியபிரகாஷ் நன்றி கூறினார்.

0 comments: