Saturday, December 13, 2014
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள் மட்டும் அல்லாது மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிற இடமாக ரேஸ்கோர்ஸ் மைதானம் விளங்குகிறது .ஆனால் இங்கு விளையாட்டில் பங்கேற்க வரும் வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு அடிப்படை வசதிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது .குடிநீரை கூட வெளியில் விலைக்கு வாங்கி சமாளித்துக் கொண்டாலும் கழிப்பறையின் நிலையை காண சகிக்கவில்லை .கழிப்பறைக்குள் கால் வைக்க முடியாதபடி கழிவுகள் பரவிக் கிடக்கிறது .கழிப்பறையை பயன்படுத்தும் ஆண்களுக்கு உபயோகப்படுத்த ஒரு சொட்டு நீர் கூட இல்லாததால் பெரும்பாலான ஆண்கள் மைதானத்தின் கேலரி பின்புறத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் .ஆண்கள் நிலை இப்படி என்றால் பெண்கள் நிலையோ இன்னும் பரிதாபமாக உள்ளது .ஆனால் இதனை சரி செய்யாமல் இங்கு நடைபெறுகிற நிகழ்சிகளில் எத்தனையோ முறை கலந்து கொண்டுள்ள அமைச்சர்களும் ,நாடாளுமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற உறுப்பினர்கள் பல கோடி ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்கி உள்ளதாக புராணம் பாடுவதை ஏற்க முடியுமா ?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் திருச்சி எல்பின் நிதி நிறுவன மோசடி குறித்து திருச்சி மாவட்டக் காவல்துறை...
0 comments:
Post a Comment