Wednesday, December 31, 2014
2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் அளிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இந்தப் பரிசுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பரிசுப்பெட்டி வழங்கப்படும்.
2015 ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு பம்பர் பரிசு ஆண்டாக இருக்கும். அரசாங்கத்தை தவிர ஒரு முக்கிய வங்கியும் அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கியின் பரிசுப்பெட்டியில் கையுறைகள், செல்பீ ஸ்டிக் மற்றும் ஒரு பணப்பெட்டியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்த பரிசுகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்டாலும், பல நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பரிசுகள் அளிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். ஃபின்லாந்தில் கடந்த 1930ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் கர்ப்பிணித் தாய்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனை...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் , புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறது . எனினும் த...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
0 comments:
Post a Comment