Tuesday, December 09, 2014
திருப்பூரிலிருந்து வீட்டுக்கு தெரியாமல் கோவாவுக்கு சுற்றுலா சென்ற 5 மாணவர்கள் மீட்பு போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
திருப்பூர் சாமுண்டிபுரம், வலையன்காடு, லட்சுமிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ஆகாஷ், வாசிம் அகரம் உள்பட 5 மாணவர்கள் குமார்நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9–ம்வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். இந்தநிலையில் இவர்கள் 5 பேருக்கும் கோவா சென்று சுற்றிப்பார்க்க ஆசை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 5 பேரும் அவரவர் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் பணம் எடுத்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி விட்டதும் திருப்பூர் ரெயில்நிலையம் வந்தனர். அந்தநேரத்தில் வந்த ஒரு ரெயிலில் ஏறி கோவை சென்று அங்குள்ள ஒரு லாட்ஜில் இரவு தங்கினர்.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் மாணவர்களை பல்வேறு இடங்களில் தேடி அலைந்து திரிந்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். நேற்று காலை தூங்கி எழுந்த மாணவர்களுக்கு எங்கு செல்வது? எப்படிசெல்வது? என்று தெரியாமல் பின்னர் திருப்பூருக்கு வந்து நேராக பள்ளிக்கு சென்றனர். மாணவர்களின் உறவினர் காலையில் மீண்டும் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது பள்ளியில் 5 பேரும் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் பள்ளிக்கு சென்று 5 மாணவர்களையும் மீட்டு விசாரித்தனர். பின்னர் 15 வேலம்பாளையம் போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் (கவுன்சிலிங்)கூறி மாணவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம், வலையன்காடு, லட்சுமிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ஆகாஷ், வாசிம் அகரம் உள்பட 5 மாணவர்கள் குமார்நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9–ம்வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். இந்தநிலையில் இவர்கள் 5 பேருக்கும் கோவா சென்று சுற்றிப்பார்க்க ஆசை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 5 பேரும் அவரவர் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் பணம் எடுத்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி விட்டதும் திருப்பூர் ரெயில்நிலையம் வந்தனர். அந்தநேரத்தில் வந்த ஒரு ரெயிலில் ஏறி கோவை சென்று அங்குள்ள ஒரு லாட்ஜில் இரவு தங்கினர்.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் மாணவர்களை பல்வேறு இடங்களில் தேடி அலைந்து திரிந்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். நேற்று காலை தூங்கி எழுந்த மாணவர்களுக்கு எங்கு செல்வது? எப்படிசெல்வது? என்று தெரியாமல் பின்னர் திருப்பூருக்கு வந்து நேராக பள்ளிக்கு சென்றனர். மாணவர்களின் உறவினர் காலையில் மீண்டும் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது பள்ளியில் 5 பேரும் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் பள்ளிக்கு சென்று 5 மாணவர்களையும் மீட்டு விசாரித்தனர். பின்னர் 15 வேலம்பாளையம் போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் (கவுன்சிலிங்)கூறி மாணவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment