Saturday, December 27, 2014
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக ஊத்துக்குளி அருகே பெண் உள்பட இருவரை திருப்பூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையைச் சேர்ந்தவர் மனோகர் மனைவி சாந்தி (46), ரெட்டிபாளையம் உடையார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் (55) ஆகியோர் சேர்ந்து, ரூ. 2 லட்சம், ரூ. 1.50 லட்சம், ரூ. 1.25 லட்சம், ஒரு லட்சம் ரூபாய், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என மாதாந்திர ஏலச்சீட்டுகளும், வாராந்திரப் பலகாரச் சீட்டுகளும் நடத்தி வந்தனர்.
இதில், பணம் செலுத்துபவர்களுக்கு அதிக லாபம், வட்டி தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ஊத்துக்குளி அருகே சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமிக்கவுண்டரின் மகன் தெய்வசிகாமணி(64) உள்பட பலரும் மொத்தம் ரூ.7.46 லட்சம் செலுத்தியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஏலச்சீட்டு நடத்திய அவர்கள், சீட்டுப் பணத்தை திரும்பத்தராமல் மோசடி செய்யதாக தெய்வசிகாமணி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாந்தி, சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
0 comments:
Post a Comment