Saturday, December 27, 2014
பல்லடத்தில் ஊழியர்கள் விடுமுறை காரணமாக மின் கட்டண வசூல் மையம் திறக்கப்படாததால் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பல்லடம் நகர உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு உள்பட்ட பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
இந்த மின் பொறியாளர் அலுவலகத்தில் இரண்டு மின் கட்டண வசூல் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மைய ஊழியர்கள் இருவரும், வெள்ளிக்கிழமை விடுமுறையில் சென்று விட்டனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை, வழக்கம்போல் மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் இந்த மையத்துக்கு வந்தனர். ஆனால், இந்த மையம் திறக்கப்படாததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் சுரேஷ்பாபு கூறியதாவது: மின் கட்டண வசூல் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரும் விடுமுறையில் சென்று விட்டனர். இதனால், இணையதள வழியாக மின் கட்டணம் வசூல் செய்ய முடியவில்லை. அதற்கான இனையதள பயனர் பெயர், பயனர் புகு எண்ணை அவ்ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந...
0 comments:
Post a Comment