Sunday, December 21, 2014
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார்.
தாராபுரம் அருகே உள்ள சீராம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி ராதா (25). இவர் தாராபுரம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் செல்வமித்ரா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற கனகராஜ் தனது மனைவி ராதா மற்றும் நண்பர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டு “நான் விஷம் குடித்து விட்டேன், ஒரு மணி நேரத்தில் இறந்து விடுவேன்“ என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்ததோடு மட்டுமின்றி செல்போனையும் அணைத்து வைத்துவிட்டார்.
இதனால் பதறிப்போன அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் ஒரு காரில் கனகராஜை தேடி அலைந்தனர். அவரை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவர்களால் கனகராஜை கண்டு பிடிக்க முடியாததால் நேராக தாராபுரம் போலீஸ் நிலையம் சென்று தகவல் கூறினார்கள். அப்போது தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வெளியில் இருந்து தகவல் கூறிய ஒருவர் “ தில்லாபுரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் வயல்வெளியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாகவும், அவருடைய வாயில் நுரைதள்ளி இருப்பதாகவும், அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் சற்று தொலைவில் நிற்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கனகராஜ் உறவினர்கள் நேராக அங்கு சென்று பார்த்த போது, அது கனகராஜ் என தெரியவந்தது. உடனடியாக அவரை காரில் ஏற்றிக்கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து தாராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாச்சிமுத்து, ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment