Tuesday, December 09, 2014
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை:
’’பகவத்
கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள்
நிறைவடைந்துவிட்டதாகவும் மைய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து
சரிந்துவரும் பொருளாதார நிலையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்காமல், நூறுநாள்
வேலைத் திட்டத்தையும் பலவீனப்படுத்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில்
அடித்துள்ள பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் இந்தித்
திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என ஒவ்வொருநாளும் ஒரு புதுப் பிரச்சனையைக்
கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது.
பாபர்
மசூதியை இடித்து நாடெங்கும் கலவரம் ஏற்படக் காரணமானவர்கள் இப்போது உலக
அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் குறித்தும் பிரச்சனை கிளப்ப
ஆரம்பித்திருக்கிறார்கள். பழங்காலக் கோயில் ஒன்றின் மீது தாஜ்மகால்
கட்டப்பட்டிருப்பதாக இப்போது உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லட்சுமிகாந்த்
பாஜ்பாய் பேசியிருக்கிறார்.
வகுப்புவாத
வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அந்தச் சந்தடியில் தனியாருக்கு
எல்லாவற்றையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு
உலை வைப்பதுதான் பாஜக அரசின் திட்டமோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.
”பகவத்
கீதை என்பது ஒரு நற்செய்தி நூலல்ல. அதுவொரு சமய நூலோ அல்லது தத்துவ நூலோ
அல்ல. தத்துவ அடிப்படைகளை முன்வைத்து மதத்தைத் தாங்கிப்பிடிக்கும்
நூல்தான் அது.” என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய
சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் எதிர்ப் புரட்சியை ஆதரிக்கும்
நூலாகவே அதை அவர் பார்த்தார். அதைத் தேசியப் புனித நூலாக அறிவிப்போம்
என்பதை சனநாயக சக்திகள் ஒருபோதும் ஏற்க முடியாது. மக்களைப் பிளவுபடுத்தும்
அந்த முயற்சியை பாஜக அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment