Tuesday, December 09, 2014
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை:
’’பகவத்
கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள்
நிறைவடைந்துவிட்டதாகவும் மைய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து
சரிந்துவரும் பொருளாதார நிலையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்காமல், நூறுநாள்
வேலைத் திட்டத்தையும் பலவீனப்படுத்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில்
அடித்துள்ள பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் இந்தித்
திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என ஒவ்வொருநாளும் ஒரு புதுப் பிரச்சனையைக்
கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது.
பாபர்
மசூதியை இடித்து நாடெங்கும் கலவரம் ஏற்படக் காரணமானவர்கள் இப்போது உலக
அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் குறித்தும் பிரச்சனை கிளப்ப
ஆரம்பித்திருக்கிறார்கள். பழங்காலக் கோயில் ஒன்றின் மீது தாஜ்மகால்
கட்டப்பட்டிருப்பதாக இப்போது உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லட்சுமிகாந்த்
பாஜ்பாய் பேசியிருக்கிறார்.
வகுப்புவாத
வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அந்தச் சந்தடியில் தனியாருக்கு
எல்லாவற்றையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு
உலை வைப்பதுதான் பாஜக அரசின் திட்டமோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.
”பகவத்
கீதை என்பது ஒரு நற்செய்தி நூலல்ல. அதுவொரு சமய நூலோ அல்லது தத்துவ நூலோ
அல்ல. தத்துவ அடிப்படைகளை முன்வைத்து மதத்தைத் தாங்கிப்பிடிக்கும்
நூல்தான் அது.” என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய
சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் எதிர்ப் புரட்சியை ஆதரிக்கும்
நூலாகவே அதை அவர் பார்த்தார். அதைத் தேசியப் புனித நூலாக அறிவிப்போம்
என்பதை சனநாயக சக்திகள் ஒருபோதும் ஏற்க முடியாது. மக்களைப் பிளவுபடுத்தும்
அந்த முயற்சியை பாஜக அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment