Monday, December 29, 2014
திருப்பூர், : 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் சக்ஷம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார், ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், சக்ஷம் அமைப்பின் தேசிய செயலாளர் கமேஷ்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக்குழு தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, குற்றங்கள், இழிவுத்தன்மை தொடர்பாக அந்தந்த தாசில்தாரிடம் முறையீடு செய்ய வேண்டும் என்றிருப்பதை, போலீஸ் ஸ்டேஷனிலும் முறையீடு செய்யலாம் என்று மசோதாவில் திருத்த செய்யப்பட வேண்டும். 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்றிருப்பதற்கு பதில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 18 வயது மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்று மசோதா திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 8 சதவீதம் ஒதுக்கீடு செய்யும்விதமாக திருத்தம் செய்ய வேண்டும். அரசின் சி மற்றும் டி பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயதுவரம்பு முழுமையாக அகற்றும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். 100 சதவீத உடல்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளில் மனைவி அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் சக்ஷம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார், ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், சக்ஷம் அமைப்பின் தேசிய செயலாளர் கமேஷ்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக்குழு தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, குற்றங்கள், இழிவுத்தன்மை தொடர்பாக அந்தந்த தாசில்தாரிடம் முறையீடு செய்ய வேண்டும் என்றிருப்பதை, போலீஸ் ஸ்டேஷனிலும் முறையீடு செய்யலாம் என்று மசோதாவில் திருத்த செய்யப்பட வேண்டும். 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்றிருப்பதற்கு பதில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 18 வயது மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்று மசோதா திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 8 சதவீதம் ஒதுக்கீடு செய்யும்விதமாக திருத்தம் செய்ய வேண்டும். அரசின் சி மற்றும் டி பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயதுவரம்பு முழுமையாக அகற்றும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். 100 சதவீத உடல்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளில் மனைவி அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment