Wednesday, December 10, 2014
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் பத்திரிகையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆந்திர காவல் துறையினரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்தும், பத்திரிகையாளர்களை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், பத்திரிகையாளர்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. செயலாளர் வே.தூயவன், விடுதலை மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.
திரளான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment