Wednesday, December 17, 2014
மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று அம்மா திட்டம் மூலம் நடந்த துப்புரவு பணியை மேயர், நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்.மதுரை மாநகராட்சியை சுத்தப்படுத்தும் வகையில் அழகிய மதுரை மாநகர் (அம்மா) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட கோர்ட்டில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட வக்கீல் சங்கத்தினர் மாநகராட்சியிடம் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி வக்கீல் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இன்று அழகிய மதுரை மாநகர் (அம்மா) திட்டம் மூலம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மேயர் ராஜன்செல்லப்பா, மாவட்ட நீதிபதிகள் சின்னராஜ், கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சுமார் 100–க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கோர்ட்டு முழுவதும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். பொக்லைன், புல்டோசர் எந்திரம் மூலம் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து மேயர் ராஜன் செல்லப்பா கூறுகையில், வக்கீல் சங்கத்தினர் கேட்டுக் கொண்டதன்பேரில் இன்று கோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாதத்திற்கு ஒருமுறை இங்கு துப்புரவு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் பழனிச்சாமி, நகர் நல அலுவலர் யசோதா மணி, வக்கீல் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், ராமசாமி, நெடுஞ்செழியன், அரசு வக்கீல்கள் ரமேஷ், தமிழ்செல்வம், கண்ணன், சேதுராமன், பாலசுப்பிரமணி மற்றும் வக்கீல்கள் ஜெயக்குமார், அசோகன், ரமணி, மக்கள் செய்தி தொடர்பாளர் சித்திரைவேல், ஜெயலலிதா பேரவை நிர்வாகி நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
02.09.2014 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் கட்டப்பட்டுவரும் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தை மாவட்ட ஆட்சிதலைவர் திர...
0 comments:
Post a Comment