Sunday, December 21, 2014
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரிய வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வர்த்தகத்தில் ஈடுபடும் நைஜீரியர்கள் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது வழக்கம். பெரும்பாலான நைஜீரியர்களுக்கு விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதில்லை. விசா காலம் முடிந்த பின்னரும் அவர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்து வருகிறார்கள். இவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் நைஜீரியர்களை போலீசார் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தாலும் கூட ஆவணங்கள் இல்லாமல் நைஜீரியர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள கியாஸ் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட தகராறில் நைஜீரிய வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த நைஜீரிய வாலிபர் பெயர் இசனேக் வி ஜிசிக்கோ(வயது 31) என்பதும், நைஜீரிய நாடு இமாகு ஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில் தங்கியிருந்து பனியன் வர்த்தகம் செய்து வந்ததும், ஆனால் அவரிடம் பாஸ்போர்ட், விசா, மஞ்சள் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்ததாக இசனேக் வி ஜிசிக்கோவை திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் கைது செய்து திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2–ல் ஆஜர்படுத்தினார்கள். இசனேக் வி ஜிசிக்கோவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கோர்ட்டு முன் போலீஸ் ஜீப்புக்குள் அவர் அமர்ந்து இருந்தார். மாஜிஸ்திரேட்டு வேலுச்சாமி கோர்ட்டில் இருந்து வெளியே நின்ற ஜீப்புக்கு அருகே வந்து இசனேக் வி ஜிசிக்கோவிடம் விசாரணை நடத்தி விட்டு, பின்னர் அவரை வருகிற 31–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...

0 comments:
Post a Comment