Thursday, January 01, 2015

ஆண்மை பலம் பெருக வேண்டும் என்பதற்காக புலிகளைக் கொன்று தின்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த வியாபாரி சிபாட். இவர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் ஆண் புலிகளை வேட்டையாடி அவற்றின் ஆண் உறுப்பு, மற்றும் இறைச்சியைச் சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும் புலிகளின் ரத்தத்தை மதுவாகக் குடித்து மகிழ்ந்தார். சிபாட் தனது ஆண்மை சக்தியைப் பெருக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தான் மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் அவ்வப்போது விருந்து அளித்து மகிழ்ந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் புலியைக் கொன்று இறைச்சியைத் துண்டாக்கும் காட்சிகள் செல்போனில் படமாக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
சிபாட் உள்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபாட்டுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 14 பேருக்கு 5 மற்றும் ஆறரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
உலக அளவில் காடுகளில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இது போன்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment