Monday, January 19, 2015
கிழக்கு சீனாவில் ஓடும் யாங்சே நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜியாங்ஸு மாகாணத்தில் ஜாங்ஜியாகாங் என்ற பகுதிக்கு அருகில் சில பரிசோதனைகளை இந்தப் படகு மேற்கொண்டிருந்தபோது, வியாழக்கிழமையன்று இந்த விபத்து நேரிட்டது. அப்போது இந்தப் படகில் 25 பேர் இருந்தனர்.
விபத்து நேரிட்டபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு பேர், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த இருவர், ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் என வெளிநாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேரும் படகில் இருந்தனர்.
படகில் இருந்தவர்களில் மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் 22 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
30 மீட்டர் நீளம் கொண்ட, வாங்ஷென்ஷு 67 என்ற இந்தப் படகு சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. விபத்து நிகழ்ந்தபோது, படகில் அதன் உரிமையாளரும் சில பொறியாளர்களும் இருந்தனர்.
வெள்ளிக்கிழமையன்று மீட்கப்பட்ட வாங் ஷென்ஹுவா என்பவர், பிரதான எஞ்சினை சோதனை செய்து கொண்டிருந்தபோது, படகு திடீரென தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, 20 வினாடிகளில் ஓட்டுனர் அறை முழுவதும் நீரால் நிரம்பிவிட்டதாக அவர் கூறினார். அங்கிருந்த ஹைட்ராலிக் பம்பை பிடித்துக்கொண்டு தான் உயிர் தப்பியதாகவும் இவர் கூறினார்.
ஜப்பானைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரையும் தான் பிடித்துக்கொள்ள முயன்றதாகவும், ஆனால், படகு மேலும் மேலும் மூழ்கவே அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் வாங் கூறினார்.
இந்தப் படகு கடந்த அக்டோபரில் சீனாவில் கட்டப்பட்டது. இந்தப் படகு எங்கே செல்லவிருக்கிறது, என்ன செய்யப்போகிறது என்ற விவரங்களை துறைமுக அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கவில்லையென உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment