Friday, February 06, 2015
திருப்பூர், பிச்சம்பாளையம், ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் (வயது 38). இவர் பி.என்.ரோட்டில் கம்ப்யூட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அம்மாபாளையம் சுகம் ரெசிடன்சி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (33) என்பவர் கடந்த 4 வருடமாக கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கி பின்னர் சொந்தமாக கம்ப்யூட்டர் தயார் செய்து விற்பனை செய்து வந்தார். இதனால் ரமேஷ்குமாருக்கு பிரசாந்த் சுமார் ரூ.1 லட்சம் கடன் தர வேண்டியிருந்தது. இதுகுறித்து பல தடவை நேரிலும், போனிலும் கேட்டபோது பிரசாந்த் நாட்களை தள்ளி போட்டுக்கொண்டே வந்துள்ளார். ஆனால் இதுவரை பணம் தரவில்லை. இதேபோல் மற்றொரு ரமேஷ் என்பவருக்கும் ரூ.1.25 லட்சம் பிரசாந்த் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கிய வகையில் பாக்கி தர வேண்டியுள்ளது. இதன்மூலம் பிரசாந்த் இருவருக்கும் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 525 தர வேண்டி இருந்தது. இந்தநிலையில் ரமேஷ்குமாரும், ரமேஷும் ஸ்ரீநகர் புறக்காவல் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது பிரசாந்த் அங்கு வந்துள்ளார். உடனே இருவரும் தங்களுக்கு தர வேண்டிய பணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த் பணத்தை தர முடியாது என்று கூறி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செலவராஜ் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
திருப்பூர், நெருப்பெரிச்சல், வாவிபாளையம் பகுதியில் உள்ள குருவாயூரப்பன் நகரில் நடுரோட்டில் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தார். அப்போது அவர் மீது பல வழக்குகள் இருப்பதும், அவர் பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த அசோக் (வயது 29) என தெரியவந்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment