Friday, February 06, 2015
திருப்பூர், பிச்சம்பாளையம், ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் (வயது 38). இவர் பி.என்.ரோட்டில் கம்ப்யூட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அம்மாபாளையம் சுகம் ரெசிடன்சி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (33) என்பவர் கடந்த 4 வருடமாக கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கி பின்னர் சொந்தமாக கம்ப்யூட்டர் தயார் செய்து விற்பனை செய்து வந்தார். இதனால் ரமேஷ்குமாருக்கு பிரசாந்த் சுமார் ரூ.1 லட்சம் கடன் தர வேண்டியிருந்தது. இதுகுறித்து பல தடவை நேரிலும், போனிலும் கேட்டபோது பிரசாந்த் நாட்களை தள்ளி போட்டுக்கொண்டே வந்துள்ளார். ஆனால் இதுவரை பணம் தரவில்லை. இதேபோல் மற்றொரு ரமேஷ் என்பவருக்கும் ரூ.1.25 லட்சம் பிரசாந்த் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கிய வகையில் பாக்கி தர வேண்டியுள்ளது. இதன்மூலம் பிரசாந்த் இருவருக்கும் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 525 தர வேண்டி இருந்தது. இந்தநிலையில் ரமேஷ்குமாரும், ரமேஷும் ஸ்ரீநகர் புறக்காவல் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது பிரசாந்த் அங்கு வந்துள்ளார். உடனே இருவரும் தங்களுக்கு தர வேண்டிய பணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த் பணத்தை தர முடியாது என்று கூறி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செலவராஜ் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
திருப்பூர், நெருப்பெரிச்சல், வாவிபாளையம் பகுதியில் உள்ள குருவாயூரப்பன் நகரில் நடுரோட்டில் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தார். அப்போது அவர் மீது பல வழக்குகள் இருப்பதும், அவர் பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த அசோக் (வயது 29) என தெரியவந்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment