Monday, March 30, 2015
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடுமலைபேட்டை பகுதியில் பள்ளி ஒன்றில்மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் அதே பள்ளியில் வேலை செய்துவந்த ஆசிரியர் ராம்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இந்த தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் உடனடியாக காவல் துறைக்குத் தெரிவித்து குற்றம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு. மேலும்,கல்வித்துறை, காவல் துறைக்குத்தெரிவிக்காமல், நிர்வாகரீதியாக விசாரணை நடத்தி அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததும், குற்றவாளியைத் தப்புவதற்குச் செய்யக்கூடிய தவறான நடவடிக்கையாகும்.
ஆகவே காவல் துறைக்குத் தெரிவிக்காமல் சட்டத்துக்குப் புறம்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்,மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து காவல் துறையிடம் புகார் கொடுத்த பிறகே,சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (பாக்சோ) சட்டப்பிரிவு 9 (எம்)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டும் போதுமானதல்ல. பள்ளியின் ஆசிரியரே சிறுமியிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து மோசமாக நடந்து கொண்டிருந்ததால் மேற்படி பாக்சோ சட்டப்பிரிவு 9 (எப்) மற்றும் 9 (எல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த வழக்கில் சட்ட நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடித்துக் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் உரிய கலந்தாலோசனை வழங்கி உளவியல் பாதிப்பைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...

0 comments:
Post a Comment