Monday, March 30, 2015
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடுமலைபேட்டை பகுதியில் பள்ளி ஒன்றில்மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் அதே பள்ளியில் வேலை செய்துவந்த ஆசிரியர் ராம்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இந்த தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் உடனடியாக காவல் துறைக்குத் தெரிவித்து குற்றம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு. மேலும்,கல்வித்துறை, காவல் துறைக்குத்தெரிவிக்காமல், நிர்வாகரீதியாக விசாரணை நடத்தி அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததும், குற்றவாளியைத் தப்புவதற்குச் செய்யக்கூடிய தவறான நடவடிக்கையாகும்.
ஆகவே காவல் துறைக்குத் தெரிவிக்காமல் சட்டத்துக்குப் புறம்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்,மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து காவல் துறையிடம் புகார் கொடுத்த பிறகே,சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (பாக்சோ) சட்டப்பிரிவு 9 (எம்)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டும் போதுமானதல்ல. பள்ளியின் ஆசிரியரே சிறுமியிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து மோசமாக நடந்து கொண்டிருந்ததால் மேற்படி பாக்சோ சட்டப்பிரிவு 9 (எப்) மற்றும் 9 (எல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த வழக்கில் சட்ட நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடித்துக் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் உரிய கலந்தாலோசனை வழங்கி உளவியல் பாதிப்பைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment