Wednesday, April 01, 2015
பொதுமக்கள் எளிதில் மருத்துவ சேவையைப் பெறும் வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் மொத்தம் 85 நகர துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:
திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் தற்போது 4 நகர்நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவ நிலையங்கள், 2 மருந்தகங்கள் உள்ளன. அவற்றின் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தரமான மருத்துவ சிகிச்சையை எளிதில் பெறும் வகையில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு நகர துணை சுகாதார நிலையம் வீதம் மாநகரில் மொத்தம் 85 நகர துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசு மானியமாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான்காவது குடிநீர் திட்டம்: குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தும் வகையில், முதற்கட்டமாக தேவையான இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கவும், குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிக்கவும், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலமாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. நிகழாண்டு அந்த திட்டத்தை நிதியுதவி மூலமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மண்டலங்களுக்கு நிதிஒதுக்கீடு உயர்வு: தற்போது, மண்டலத்துக்கு தலா ரூ.2.50 கோடி வீதம் 4 மண்டலங்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கீடு என இருப்பதை உயர்த்தி, நிகழாண்டு மண்டலத்துக்கு தலா ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை குழாய்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, முழு அளவில் பயன்பாட்டில் உள்ள திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தின்
முன்பு, உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 23.30 கோடி மதிப்பில் வணிகவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், இதர வசதிகளுடன் நுழைவாயிலில் முகப்புக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
0 comments:
Post a Comment