Wednesday, April 01, 2015
பொதுமக்கள் எளிதில் மருத்துவ சேவையைப் பெறும் வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் மொத்தம் 85 நகர துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:
திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் தற்போது 4 நகர்நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவ நிலையங்கள், 2 மருந்தகங்கள் உள்ளன. அவற்றின் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தரமான மருத்துவ சிகிச்சையை எளிதில் பெறும் வகையில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு நகர துணை சுகாதார நிலையம் வீதம் மாநகரில் மொத்தம் 85 நகர துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசு மானியமாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான்காவது குடிநீர் திட்டம்: குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தும் வகையில், முதற்கட்டமாக தேவையான இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கவும், குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிக்கவும், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலமாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. நிகழாண்டு அந்த திட்டத்தை நிதியுதவி மூலமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மண்டலங்களுக்கு நிதிஒதுக்கீடு உயர்வு: தற்போது, மண்டலத்துக்கு தலா ரூ.2.50 கோடி வீதம் 4 மண்டலங்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கீடு என இருப்பதை உயர்த்தி, நிகழாண்டு மண்டலத்துக்கு தலா ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை குழாய்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, முழு அளவில் பயன்பாட்டில் உள்ள திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தின்
முன்பு, உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 23.30 கோடி மதிப்பில் வணிகவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், இதர வசதிகளுடன் நுழைவாயிலில் முகப்புக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment