Monday, April 20, 2015
திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில், இருமுறை திரையரங்கு உரிமையாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. அக்கூட்டங்களில் வழங்கப்பட்ட அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
அனைத்து திரையரங்குகளிலும், உரிமம் வழங்கும் அலுவலரால் அனுமதிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். விழாக் காலங்களில், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. இணைய முன்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. மேலும், இணைய வழியில் பெறப்பட்ட நுழைவுச் சீட்டை மாற்றித் தரும்போது பார்வையாளர்களுக்கு வணிகவரி முத்திரையிடப்பட்ட நுழைவுச் சீட்டு தவறாமல் வழங்க வேண்டும். பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டில் காட்சி நேரம், வகுப்பு, நுழைவுச் சீட்டு எண் மற்றும் வணிகவரித் துறை முத்திரை ஆகியவை இருக்க வேண்டும்.
அரசின் முன் அனுமதியின்றி திரையரங்கில் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக காட்சிகள் நடத்தக்கூடாது. குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் காட்சிகள் முடியும் வரை முழுமையாக அவை இயக்கப்பட வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமைதாரர்களும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். விதியை மீறும் திரையரங்குகள் மீது புகார் ஏதும் வரப்பெற்றால் தமிழ்நாடு திரையரங்கு (ஒழுங்குமுறை) சட்டம் 1955-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக் கியவர். கடந்த மே மாதம் இ...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
காங்கயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயத்தில் அம்மா உணவக...
0 comments:
Post a Comment