Monday, April 20, 2015
திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில், இருமுறை திரையரங்கு உரிமையாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. அக்கூட்டங்களில் வழங்கப்பட்ட அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
அனைத்து திரையரங்குகளிலும், உரிமம் வழங்கும் அலுவலரால் அனுமதிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். விழாக் காலங்களில், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. இணைய முன்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. மேலும், இணைய வழியில் பெறப்பட்ட நுழைவுச் சீட்டை மாற்றித் தரும்போது பார்வையாளர்களுக்கு வணிகவரி முத்திரையிடப்பட்ட நுழைவுச் சீட்டு தவறாமல் வழங்க வேண்டும். பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டில் காட்சி நேரம், வகுப்பு, நுழைவுச் சீட்டு எண் மற்றும் வணிகவரித் துறை முத்திரை ஆகியவை இருக்க வேண்டும்.
அரசின் முன் அனுமதியின்றி திரையரங்கில் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக காட்சிகள் நடத்தக்கூடாது. குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் காட்சிகள் முடியும் வரை முழுமையாக அவை இயக்கப்பட வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமைதாரர்களும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். விதியை மீறும் திரையரங்குகள் மீது புகார் ஏதும் வரப்பெற்றால் தமிழ்நாடு திரையரங்கு (ஒழுங்குமுறை) சட்டம் 1955-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment