Saturday, January 02, 2016

On Saturday, January 02, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடி இறைச்சிக் கடைக்கு விற்ற 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 
தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் திருமணி (70). பெட்டிகடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. பல்வேறு இடங்களில் ஆட்டை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் அவரது ஆடு கட்டப்பட்டிருப்பதை கண்டார்.  

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த சின்னதுரை (25), தாமோதர நகரைச் சேர்ந்த தங்க கார்த்திக் (22) ஆகிய இருவரும் பைக்கில் சென்று சேர்ந்து ஆட்டை திருடி இறைச்சி கடைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டையும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். 

0 comments: