Saturday, January 02, 2016
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடி இறைச்சிக் கடைக்கு விற்ற 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் திருமணி (70). பெட்டிகடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. பல்வேறு இடங்களில் ஆட்டை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் அவரது ஆடு கட்டப்பட்டிருப்பதை கண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த சின்னதுரை (25), தாமோதர நகரைச் சேர்ந்த தங்க கார்த்திக் (22) ஆகிய இருவரும் பைக்கில் சென்று சேர்ந்து ஆட்டை திருடி இறைச்சி கடைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டையும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
0 comments:
Post a Comment