Saturday, January 02, 2016
திருச்செந்தூர் சபாபதிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்கு வந்த கோவிந்தராஜ் தனது மனைவி சரண்யாதேவியுடன் நாசரேத்தை அடுத்த உடையார்குளம் கிராமத்தில் உள்ள தனது நண்பர் ஜோசப் வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக வந்தார்.
நேற்று மாலை கோவிந்தராஜூம், ஜோசப்பும் அந்த பகுதியில் உள்ள அய்யனார்குளத்திற்கு குளிப்பதற்கு சென்றனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கோவிந்தராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜ் உடல் மீட்கப்பட்டது. கோவிந்தராஜிக்கும், சரண்யாதேவிக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment