Saturday, January 02, 2016
திருச்செந்தூர் சபாபதிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்கு வந்த கோவிந்தராஜ் தனது மனைவி சரண்யாதேவியுடன் நாசரேத்தை அடுத்த உடையார்குளம் கிராமத்தில் உள்ள தனது நண்பர் ஜோசப் வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக வந்தார்.
நேற்று மாலை கோவிந்தராஜூம், ஜோசப்பும் அந்த பகுதியில் உள்ள அய்யனார்குளத்திற்கு குளிப்பதற்கு சென்றனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கோவிந்தராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜ் உடல் மீட்கப்பட்டது. கோவிந்தராஜிக்கும், சரண்யாதேவிக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment