Saturday, January 02, 2016

On Saturday, January 02, 2016 by Unknown in , ,    
திருச்செந்தூர் சபாபதிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்கு வந்த கோவிந்தராஜ் தனது மனைவி சரண்யாதேவியுடன் நாசரேத்தை அடுத்த உடையார்குளம் கிராமத்தில் உள்ள தனது நண்பர் ஜோசப் வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக வந்தார்.
நேற்று மாலை கோவிந்தராஜூம், ஜோசப்பும் அந்த பகுதியில் உள்ள அய்யனார்குளத்திற்கு குளிப்பதற்கு சென்றனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கோவிந்தராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜ் உடல் மீட்கப்பட்டது. கோவிந்தராஜிக்கும், சரண்யாதேவிக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments: