Tuesday, February 23, 2016
On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதத்தில் தமிழக விவசாயிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டு, குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெற கற்று கொள்ள வேண்டும் என க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் ஆராய்ச்சி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மற்றும் பொதுபணித்துறை நார்வே அரசின் நிதி உதவியுடன் பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்சிகளை மேற்கொண்டு வருகிறது. …
பூமி வெப்பமடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 50% குறிப்பிட்ட சில தினங்களிலேயே ஒட்டுமொத்தமாக பெய்து விடுகிறது. இதனால் வெள்ளபெருக்கு ஏற்படுகிறது. அதன் பிறகு பெரும்பாலான நாட்கள் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு காணபடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10 சென்டிமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டமானது குறைந்து கொண்டே போகிறது. நமக்கு கிடைக்கும் மொத்த தண்ணீரில்
70% விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் உபயோகிக்கும் திறனை 16% விவசாயிகள் மட்டுமே அறிந்துள்ளனர். வறட்சி காலங்களில் விவசாயிகள் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்களது வாட்டத்தை போக்கும் விதமாக க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இதில் குறைந்த தண்ணீரை செலவு செய்து அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையிலான திருந்திய நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது, நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது, மண்ணை உயிர்பிப்பது, சிறு குறு தானியங்கள் உற்பத்தி செய்வது, சொட்டுநீர்பாசன முறை பின்பற்றுவது, விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
62 வகையான நெற்பயிர்களை நடவு செய்து ,அதிக வெப்பத்தில் குறைந்த தண்ணீரை கொண்டு அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள் ஈரோடு மாவட்டத்தில் பசுமையான காளிங்கராயன் பகுதியிலும், திருச்சியில் வரட்சியான பொன்னனை அணைக்கட்டு பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment