Tuesday, February 23, 2016
On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதத்தில் தமிழக விவசாயிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டு, குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெற கற்று கொள்ள வேண்டும் என க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் ஆராய்ச்சி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மற்றும் பொதுபணித்துறை நார்வே அரசின் நிதி உதவியுடன் பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்சிகளை மேற்கொண்டு வருகிறது. …
பூமி வெப்பமடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 50% குறிப்பிட்ட சில தினங்களிலேயே ஒட்டுமொத்தமாக பெய்து விடுகிறது. இதனால் வெள்ளபெருக்கு ஏற்படுகிறது. அதன் பிறகு பெரும்பாலான நாட்கள் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு காணபடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10 சென்டிமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டமானது குறைந்து கொண்டே போகிறது. நமக்கு கிடைக்கும் மொத்த தண்ணீரில்
70% விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் உபயோகிக்கும் திறனை 16% விவசாயிகள் மட்டுமே அறிந்துள்ளனர். வறட்சி காலங்களில் விவசாயிகள் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்களது வாட்டத்தை போக்கும் விதமாக க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இதில் குறைந்த தண்ணீரை செலவு செய்து அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையிலான திருந்திய நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது, நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது, மண்ணை உயிர்பிப்பது, சிறு குறு தானியங்கள் உற்பத்தி செய்வது, சொட்டுநீர்பாசன முறை பின்பற்றுவது, விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
62 வகையான நெற்பயிர்களை நடவு செய்து ,அதிக வெப்பத்தில் குறைந்த தண்ணீரை கொண்டு அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள் ஈரோடு மாவட்டத்தில் பசுமையான காளிங்கராயன் பகுதியிலும், திருச்சியில் வரட்சியான பொன்னனை அணைக்கட்டு பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment