Saturday, March 12, 2016
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.3.16
திருச்சி ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சியில் இயங்கி வரும் பிரபல சினிமா எல் எ திரையரங்கில் நீதி மன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென வாக்குவாதம்
கடந்த ஆண்டு திரிபுரா மாநிலம் அகர்தாலா நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் குடிநீரைக்கொண்டு செல்வதற்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அம்மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்;தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது மனுவை விசாரித்த ஆணையம் புகார்தாரருக்கு ரூ 10ää000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்;தப்பட்ட திரையரங்கு நிர்வாகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது அம்மனுவை விசாரித்த நீதிபதி வி.கே ஜெயின் தலைமையிலான ஆணையம் திரையரங்குகளுக்குக் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் வருகின்றனர் குடிநீர் இன்றி மூன்று மணி நேரம் வரை இருப்பதென்பது கடினமான ஒன்று சரியான நேரத்தில் குடிநீர் கிடைக்காத பட்சத்தில் மயக்கமடையும் நிலைகூட ஏற்படலாம் வெளியிலிருந்து குடிநீர் அனுமதிக்காத பட்சத்தில் அது சேவைப்பற்றாக்குறையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்திருக்கிறது மேலும் திரையரங்கு செயல்படும் நேரம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் குளிர்விப்பான்கள் ஒரு முறை பயன்படுததும் டம்பளர்கள் உள்ளிட்டவை கட்டாயம் சரிவர அமைக்கப்பட வேண்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் தண்ணீர் வரத்து தடைப்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டியது திரையங்க நிர்வாகத்தின் பொறுப்பு இந்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வரத்தவறினால் சேவைக் குறைபாடு காரணமாக நுகர்வோருக்கு திரையரங்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனை மதிக்காமல் திருச்சியில் செயல்படும் எல்எ சினிமா அரங்கில் இன்றைக்கு ஓருவர் மயக்கமடைந்து விட்டார் இதற்கு திரையரங்கு அலட்சியப்போக்கே காரணம் திரையரங்கத்தில் ஊழியர்கள் அதனை கண்டு கொள்வில்லை என்பதால் திரையரங்கிற்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறையினர் சமரகம் செய்து குறை நீக்க உத்திரவாதம் அளித்த பின்னர் கலைந்து சென்றனர்
பேட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட துணை செயலாளர் குமரப்பன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment