Sunday, March 20, 2016

On Sunday, March 20, 2016 by Tamilnewstv in    
திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா 20.03.2016 அன்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பேராசிரியர் க. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி அறிக்கை வாசித்தார்.  வுpழாவில் திருச்சி அன்பில்; தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி தலைவர் டாக்டர் பாண்டியராஜன்;இ; பல்கலைக்கழக தர வரிசையில் தேர்;ச்சி பெற்ற 32 மாணவ மாணவியருக்கு விருதுகளையுமää; பட்ட சான்றிதழ்களையும் வழங்கினாh.;; மேலும் இவ்விழாவில் 1030 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டங்களைப் பெற்றனர்.
மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாணவர்கள் அவர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைப்பவர்களே வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைகின்றனர். நாம் ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல் நம்முடைய தனித் திறன்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தி தனித்திறமை வாய்ந்தவர்களாக வாழ்வில் முன்னேற வேண்டும். இந்த உலகில் எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றனஇ அவற்றை கண்டறிவதில் நம்முடைய மனப்பான்மையும் கண்ணோட்டமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஓரே சு10ழலில் வாய்ப்புக்களை கண்டறிவதில் இரண்டு நபர்களின் கண்ணோட்டத்தில் வேறுபாடு ஏற்படுகிறதுஇ ஒருவர் அதில் உள்ள வாய்ப்பையும் மற்றவர் அதில் உள்ள எதிர் விளைவுகளையும் காண்கின்றனர். மாணவர்கள் எந்த ஒரு சு10ழலிலும்  அதில் உள்ள நல்ல வாய்ப்புக்களைக் கண்டுணர்ந்து பயன்படுத்தி வாழ்வில் மேம்பட வேண்டும். நிறைய தருணங்களில் நமக்கு ஏற்படும் இன்னல்களையும் தடைகளையும் தோல்விகளையும் ஏற்றுக்கொண்டு மனதை உறுதிபடுத்தி எல்லாவற்றையும் நமக்கான படிக்கட்டுகளாக மாற்ற கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி என்பது ஒரு புள்ளியில் நின்று விடுவதல்ல் நம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு நிலைகளில் மேம்பாடு அடைந்து அது நம்முடனேயே பயணிக்க வேண்டும். நாம் எப்பொழுதும் நமது எண்ணங்களை பெரியதாகக் கொண்டிருக்க வேண்டும். நம் எண்ணங்களுக்கும் நம்முடைய வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கல்லூரி வாழ்க்கை நம்மில் சிறந்த ஆளுமைப்பண்புகளை வளர்க்;கிறதுஇ இவற்றோடு வேலைக்கான திறன்களிலும் நம்மை மேம்படுத்துகிறதுஇ வேலைத்திறனோடு மனித நேயப் பண்புகளை உள்ளடக்கியதாக நம் வளர்ச்சி இருக்க வேண்டும். அப்பொழுதான் நாம் நல்ல குடிமகனாக நாட்டிற்குமஇ; நல்ல பணியாளர்களாக நிறுவனத்திற்கும்இ நல்ல மனிதனாக வீட்டிற்கும் பங்களித்து சமூக அக்கறை உள்ள நல்ல இதயங்களாக அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முடியும். இறுதியாக தனது உரையில் பட்டங்கள் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளை அவர்களின் பணி வாழ்வு மற்றும் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்தினார் 

0 comments: