Monday, September 04, 2017

On Monday, September 04, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி            4.9.17 

திருச்சி ஏர்போர்ட் பகுதியிலுள்ள வயர்லெஸ் ரோட்டில் மதுபான கடையை திறப்பதை முன்னிட்டு மதுக்கடையை பூட்டு போட்டு அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை எண் 10243 மூன்று மாதங்ளுக்கு முன்பு மாநில அரசின் உத்தரவுக்கு இணங்க மூடப்பட்டது தற்போது தமிழகஅரசு அறிவுறுத்தின் பேரில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி திருச்சியில் பல இடங்களில் மதுக்கடைகளை திறக்க அரிவுறுத்தினர் அதன் படி  ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை 10243 மறுபடியும் திறக்க டாஸ்மாக் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த மதுக்கடை அமைந்த இடத்தில் பல மத வழிபாட்டு ஸ்தலங்கள் பள்ளிகூடங்களும் உள்ளன. மேலும் பொதுமக்களும் நடந்து செல்லும் பாதையில் மதுக்கடையயை  திறப்பதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே மறுபடியும் திறக்ககூடாது என் வலியுறுத்தி  பல்வேறு கட்சிகள், பொதுமக்கள், பெண்கள் உட்பட70க்கு மேற்பட்டோர் மதுக்கடைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

0 comments: