Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கரொனா பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. பிரதமரும், முதல்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 75 வயதாகும் என்னை திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் தான் பொறுப்பு. புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் சார்பில் சென்ற என்னை இவ்வாறு அலைக்கிறார்கள். அந்த இடத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது. அதை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து என் மீது வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் வருவதாக பொய் செய்திகளை பரப்புகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் கடந்த பத்து நாட்கள் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும். யாரிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையின் போது என்னை மூன்று நாட்கள் காவல்நிலையத்தில் காக்க வைத்துள்ளனர். இதனால் எனக்கு கரொனா தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment