Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சூளகிரி அருகே உள்ள கொதமகுந்தியை சேர்ந்தவர் ஜாகீர். இவரது மனைவி அக்தர் (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அக்தர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உடுமலை அருகே ஊருக்குள் சுற்றிவரும் சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிறுத்தைப்புலி
உடுமலை அருகே உள்ள அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றி வருகிறது. கன்றுக்குட்டி, நாய்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வரும் சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் ஊருக்குள் சாவகாசமாக ரோட்டை கடந்து செல்வதை பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற பகுதிக்கு அருகில் சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக கூண்டு ஒன்றையும் வைத்துள்ளனர். கூண்டு வைத்து 3 நாட்கள் மேலாகியும் சிறுத்தைப்புலி சிக்கவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று இந்த பகுதிக்கு திடீரென்று வந்து சிறுத்தைப்புலியினை பிடிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மேலும் சில பகுதிகளில் கூண்டுகள் வைத்து விரைவில் சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்க எடுக்க வேண்டும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று டாம் டாம் மூலமும், பிளக்ஸ் பேனர்கள், துண்டுபிரசுரங்கள் மூலம் மக்களை எச்சரிக்கவேண்டும்.
விரைவில் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாலை வேளையில் விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்படைய கூடும். எனவே சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடனடியாக புதர்மறைவான பகுதிக்கு மாற்றி வைக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது உடுமலை ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் சைபுதீன், மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், அமராவதி வனச்சரக அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகரில் ஓடும் பஸ்களில் கைக்குழந்தைகளுடன் சென்று பணம், நகைகளை திருடிய 2 பெண்களை போலீசார் குழந்தைகளுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓடும் பஸ்சில் தொடர் திருட்டு
திருப்பூர் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக ஓடும் பஸ்சில் நகை–பணம் திருட்டு போவது அதிகரித்து வந்தது. இந்த சம்பவங்களை தடுத்து, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் ஆலோசனையின் பேரில் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்பூர் உதவி கமிஷனர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பயணிகள் போல் கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரில் டவுன் பஸ்களில் பயணம் செய்து கண்காணித்து வந்தனர்.
2 பெண்கள் குழந்தைகளுடன் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள புஷ்பா பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ்சில் ஏறி போலீசார் பயணம் செய்தனர். அப்போது கைக்குழந்தைகளுடன் ஏறிய 2 பெண்கள், ஒரு பயணியிடம் இருந்து பணத்தை திருடிவிட்டு குமார்நகர் பஸ்நிறுத்தத்தில் இறங்கி ஓடினார்கள். உடனே போலீசார் அந்த 2 பெண்களையும் விரட்டி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை வண்டிப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவிகள் கவுசல்யா(22), அருணா(30) என்பதும், இவர்களின் குழந்தைகள் ஜமுனா, சந்தோஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், கவுசல்யாவும், அருணாவும் குழந்தைகளுடன் பஸ்களில் ஏறி, பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடம் இருந்து நகை–பணத்தை திருடியுள்ளனர். வடக்கு போலீஸ் நிலைய பகுதியில் ஒரு பஸ் பயணியிடம் 14¾ பவுன் நகை, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் ஒரு பஸ்பயணியிடம் ரூ.25 ஆயிரம், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய பகுதியில் 3 பயணிகளிடம் ரூ.4¾ லட்சத்தையும், 13½ பவுன் நகையையும் திருடி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கவுசல்யா, அருணா ஆகிய 2 பேரையும் குழந்தைகளுடன் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே காமராஜர் ரோட்டில் சம்பவத்தன்று நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று அவர் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் வி.பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.ஆர்.துரைசாமி முன்னிலை வகித்தார். முகாமை பி.குணசேகரன் தொடங்கி வைத்தார். சங்க முன்னாள் தலைவர்கள் ஏ.லோகநாதன், என்.முருகேசன் ஆகியோர் பேசினர். சங்க செயலாளர் வி.வெங்கிடுசாமி நன்றி கூறினார். முகாமில் இணைச்செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் கே.பி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
முகாமில் 84 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கண் அறுவைசிகிச்சை தேவைப்பட்ட 23 பேருக்கு உடுமலையிலும், 9 பேருக்கு கோவையிலும் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இதுதவிர 19 பேருக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தாராபுரம் அகஸ்தீஸ்வர் கோவில் உள்பட 5 கோவில்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.
கோவில் நிலங்கள்
தாராபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களான அகஸ்தீஸ்வரர் கோவில், கல்யாணராமர் கோவில், உத்திர வீரராகவபெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில் உள்பட 5 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தாராபுரம் வடக்கு, கொளத்துப்பாளையம், தாராபுரம் தெற்கு, கல்யாணராமர் படுகை, செப்பு குண்டான் வயல், காரமேடு, சாமிவயல், கிருஷ்ணகோவில் வயல், கலர் வயல், பெரியகாரமேடு, கண்ணன் வயல், பிள்ளையார் முக்காணி, சாம்பான் வயல், ஆதிகாரம்பிள்ளைவயல், தாளமுக்காணி, தோப்பு வயல், தேவய்யன் வயல், காரமேடு வயல், புளியடிவயல், கருப்பக்கட்டை வயல், மஞ்சக்காணி வயல், சுள்ளுக்குத்தி வயல், ஒத்தக்குண்டல் வயல், நல்லக்காள் முக்காணி வயல் ஆகிய பகுதிகளில் உள்ளது. இந்த நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள் நெல், கரும்பு, தென்னை, மற்றும் காய்கறிகள் செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுகிறது. அதன்படி மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் நேற்று கல்யாண ராமர் கோவிலில் வைத்து ஏலம் விடப்பட்டது.
ரூ.5.32 லட்சம்
இந்த ஏலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்வது வருபவர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
அதன்படி காலையில் தொடங்கிய ஏலம் மாலை வரை நடைபெற்றது. ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் போட்டிபோட்டு ஏலத்தொகையை கேட்டனர். தற்போது காய்கறி பயிர்களுக்கு ஓரளவுக்குவிலை கிடைத்துள்ளதால் ஏலத்தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று கோவில் நிலங்கள் ஓராண்டு குத்தகைக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 400–க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தொகை அடுத்த ஆண்டு ஜூன் 30–ந் தேதி வரை மட்டும் என்றும் ஜூலை மாதம் 1–ந்தேதி மீண்டும் ஏலம் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
முத்தூர் அருகே மு.வேலாயும்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஒரு செடியில் 40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு உருவாகியுள்ளது.
மரவள்ளி கிழங்கு செடி
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மரவள்ளி கிழங்கு குச்சியை பள்ளி வளாகத்தில் ஊன்றி வைத்து தினமும் நீர் பாய்ச்சி வந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு செடி சுமார் 7 அடிக்கு மேல் நன்கு வளர்ந்து விட்டது.
40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரிய–ஆசிரியைகள் இந்த மரவள்ளிகிழங்கு செடியை வெட்டிவிட்டு அடியில் தோண்டி பார்த்தபோது மரவள்ளி கிழங்கு நீண்டதாகவும், உருண்டையாகவும் மிகப்பெரிய ராட்சத அளவில் பெரிய கிழங்காக இருந்ததை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் நேரில் வந்து இந்த பெரிய மரவள்ளி கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு சுமார் 40 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது.
ஆச்சரியம் அளிக்கிறது
இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:– மரவள்ளிகிழங்கு கிழங்கு வகையை சேர்ந்ததாகும். இந்தியாவில் மரவள்ளிகிழங்கு நேரடியாக வேகவைத்த உணவுப்பொருளாகவும், ஜவ்வரிசி, பாயாசம், சிப்ஸ் மூலப்பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு இனிப்பு மற்றும் கசப்பு ஆகிய 2 வகைகளில் உள்ளது. மரவள்ளி கிழங்கின் உள்ளே இறுகிய நிலையில் வெண்மை நிறத்தில் மாவுப்பொருள் உள்ளது. மரவள்ளி கிழங்கு கால்நடை தீவனம், ஆல்கஹால் தயாரிப்பதற்கு உபரி மூலப்பொருளாக பயன்படுகிறது. மரவள்ளி கிழங்கு செடி 1 வருட பயிராகும். சாதாரணமாக மரவள்ளி கிழங்கு செடியை அறுவடை செய்யும்போது கிழங்கு ஒன்று 1 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இந்த அரசு பள்ளியில் ஒரு செடியில் உருவான மரவள்ளிகிழங்கு மிகப்பெரிய அளவில் அதிக எடை கொண்டதாக உருவாகியுள்ளது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடுமலை, தளி, மடத்துக்குளம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில், காலியாக உள்ள பதவியிடங்களுக்கு, உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில், தேர்தல் முன்னேற்பாடுகள் இன்று செய்யப்படுகிறது. இதனால், தேர்தல் மையங்களாக உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள் விவரம் வருமாறு:
* திருப்பூர் மாநகராட்சி (22வது வார்டு) அருள்ஜோதி நகர் ராகவேந்திரா பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி. (45 வது வார்டு) முத்துப்புதூர் மாநகராட்சி பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, கே.எஸ்.சி., அரசு பள்ளி, செல்லப்பபுரம் மாநகராட்சி பள்ளி.
* பல்லடம் நகராட்சி (6வது வார்டு) டி.இ.எல்.சி., நடுநிலை பள்ளி, பல்லடம்.
* மடத்துக்குளம் பேரூராட்சி (தலைவர்) கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, மடத்துக்குளம் அரசு பள்ளி, கழுகரை ஊராட்சி பள்ளி, மடத்துக்குளம், மஜராபுதூர், ச.க., 
புத்தூர், கிழக்கு நீலம்பூர், கணேசபுரம், போத்த நாயக்கனூர், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள்.
* தளி பேரூராட்சி ( 5வது வார்டு) தளி ஊராட்சி ஒனறிய பள்ளி.
* திருமுருகன் பூண்டி பேரூராட்சி (தலைவர்) தேவராயம்பாளையம், அணைப்புதூர், திருமுருகன்பூண்டி ஊராட்சி பள்ளிகள், அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.
* அவிநாசி ஒன்றியம் (16வது வார்டு) கணியாம்பூண்டி, நல்லிகவுண்டம்பாளையம், சாமந் தங்கோட்டை கிழக்கு, மற்றும் புதுப்பாளை யம் ஊராட்சி பள்ளிகள், கணியாம்பூண்டி நூலக கட்டிடம், வஞ்சிபாளையம் அரசு பள்ளி.
* பழங்கரை ஊராட்சி (12வது வார்டு) பெரியாயிபாளையம் அரசு துவக்கப்பள்ளி.
*பல்லடம், கே. அய்யம்பாளையம் (பொது வார்டு) அய்யம்பாளையம் மற்றும் முத்தாண்டிபாளையம் ஊராட்சி பள்ளிகள்,
*பல்லடம், பணிக்கம்பட்டி (பொது வார்டு) ரங்கசமுத்திரம், சின்னியகவுண்டம்பாளையம், வேலப்பகவுண்டம்பாளையம் மற்றும் பணிக்கம்பட்டி ஊராட்சி பள்ளிகள்.
*பல்லடம், அனுப்பட்டி (பொது) அனுப்பட்டி, ஊராட்சி நடுநிலை பள்ளி.
*உடுமலை, செல்லப்பம்பாளையம் (பொது வார்டு) செல்லப்பம்பாளையம் ஊராட்சி பள்ளி. சின்னப்புதூர் ஊராட்சி பள்ளிகள்.
*உடுமலை புங்கமுத்தூர் (பொது) சின்னபொம்மன் சாளை ஊராட்சி பள்ளி என,தேர்தல் நடக்கும் மையங்களாக உள்ள இப் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் இரண்டு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் : வெயில் அதிகரித்து வருவதால், மின்பயன்பாடும் அதிகரித்துள்ளது. எனவே, மின் சிக்கனத்தை கட்டாயம் பின்பற்றுமாறு, பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.

தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.

மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.