Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by Unknown in ,    



நைஜீரிய நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பல பெண்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

நைஜீரியாவை சேர்ந்த போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு அந்நாட்டில் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அப்பாவி கிராம மக்களைக் கொல்வது, பெண்களைக் கடத்திச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக ஒரு பள்ளி விடுதிக்குள் நுழைந்து சுமார் 300 மாணவிகளைக் கடத்தி சென்றனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என்று எந்த தகவலும் புலப்படவில்லை.

இந்நிலையில் குலாக் என்ற நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு அவர்கள் திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பல பெண்களைக் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் திருமணமான பெண்களும் அடங்குவர்.

இவ்வாறு கடத்தப்படும் பெண்களை தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
On Friday, September 19, 2014 by Unknown in ,    

தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக, இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் கொடுத்தது நியூயார்க் நகர நிர்வாகம்.

இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிருத்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைகள் முடிவடைந்து தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோயெல்டல் கிருத்திகாவிற்கு நஷ்ட ஈடாக 2,25,000 டாலர் தொகையினை நியூயார்க் நகர நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் கிருத்திகா மதிப்பு மிக்க மாணவியாக இருந்துள்ளார் என்றும் அவர்மீது தவறான குற்றம் சுமத்தப்பட்டது என்பதையும் நீதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் கிருத்திகா இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கு சம்பந்தமான தனது அனைத்து புகார்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதாக அறிவித்துள்ளார்.

தனக்கு இந்த வழக்கில் உதவி புரிந்த இந்திய அமெரிக்க சமூகம், முன்னாள் இந்தியத் தூதுவர்கள் பிரபு தயாள், மீரா ஷங்கர் மற்றும் தன்னுடன் துணை நின்ற தனது பள்ளித் தோழிகள், வகுப்பு ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் தனது நன்றியையும் அவர்  வெளியிட்டுள்ளார்
On Friday, September 19, 2014 by Unknown in ,    


நமது இந்திய நாட்டிற்கான புதிய அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்க வாழ் இந்தியரான ரிச்சர்ட் வர்மா, 2009 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.
 
மேலும் இவர்,இந்தியாவின் அமெரிக்க தூதராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். இப்பொறுப்பில் இருந்த நான்சி பாவெல், கடந்த மார்ச் மாதம் பதவி விலகியதை தொடர்ந்து, தற்போது ரிச்சர்டு வர்மா புதிய அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த  உத்தரவை அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
On Friday, September 19, 2014 by Unknown in ,    
திருப்பூர்:மூன்று ஆண்டுகளாக விண்ணபித்தும், குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் விதவை உதவி தொகை கிடைக்காததால், மனமுடைந்த விதவை பெண், நேற்று தனது நான்கு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.    திருப்பூர் காங்கயம் ரோடு பூலவாரி சுகுமார் நகரை சேர்ந்தவர் பானுமதி (30). இவரது கணவர் முருகன். இவர்களுக்கு சபரீஸ் (13), முத்துமார் (10) என்ற இரண்டு மகன்களும், அங்குலட்சுமி (8), சீதாலட்சுமி (4) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில்Êசமையல் தொழில் செய்து வந்த முருகன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து, நான்கு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற பானுமதி, பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டு, தனது குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், பானுமதி குடும்ப சூழ்நிலை காரண மாக கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொ கை கேட்டு விண்ணப்பித்து வருகிறார். ஆனால், இதுவ ரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைக்க பெறவி ல்லை. இதையடுத்து, கலெக் டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக் கள் குறைதீர் கூட்டத்திலும், பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். ஆனாலும், இதுவரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்து போன பானுமதி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தனது நான்கு குழந்தைகளுடன், அவரது தந்தை அய்யாசாமியையும் அ¬ ழத்து கொண்டு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு அளிக்க வந்திருந்தார்.
இதுகுறித்து பானுமதி கூறுகையில், எனது கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனது பெற்றோர் உதவியுடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து வருகி றேன். நான்கு குழந்தைகளும் பூலவாரி சுகுமார் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். இதுவரை அதற் கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை.

இன்று (நேற்று) ஏழாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இந்த முறை யாவது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, எனக்கு விதவை உதவி தொ கை கிடைக்க உதவ வேண்டும் என்பதற்காக தான் எனது நான்கு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளேன் என்றார்.
On Friday, September 19, 2014 by Unknown in ,    

பல பல வென  வெயில் அடிக்கும்  வேளையில் மின் விளக்கு எரியும்  காட்சி  இடம் திருப்பூர் அவினாசி சாலை குமார் நகர் பஸ் நிறுத்தம்  பொதுமக்களுக்கு  சிக்கனம் செய்யும் மின்சார வாரியம்
On Friday, September 19, 2014 by Unknown in ,    
 



இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் சிறு, நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மூலமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூர் ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினால் அவற்றின் வருமானம் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும், 11 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனங்களின் வருவாய், இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களைக் காட்டிலும் 15 சதவீதம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன. முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் ஏற்படும். சிறு, நடுத்தரத் தொழில்களும் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட கையாள முடியும்.
சி.ஐ.ஐ. கடந்த 2013-ஆம் ஆண்டு 1,200 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கருத்தரங்குகள் மூலமாக இந்தூர், ராஜ்கோட், நாக்பூர், புவனேஸ்வர், கவுஹாத்தி, கோட்டா, ஜாம்ஷெட்பூர், மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் தொடர்பு கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக தயாரிப்புத் திறன், போட்டியிடும் திறன், வர்த்தக வாய்ப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் திறன்பெற முடியும்.
சந்தை வாய்ப்பு பன்மடங்கு பெருகும், நேரம் மற்றும் திறன் ஆகியவற்றை மிச்சப்படுத்துவதுடன் தொழில் திறமையையும் வளர்க்க முடியும்
எனவே, தகவல் தொழில்நுட்ப உபயோகம் பற்றிய இக்கருத்தரங்கிற்கு பின்னலாடைத் தொழில் நிறுவனங்களின் தகுதியான மேலாளர்களை அனுப்பி வைக்குமாறு தொழில்துறையினரை கேட்டுக்கொள்கிறேன். முன்பதிவுக்கு 82200-32005 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
On Friday, September 19, 2014 by Unknown in ,    
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரி மாரியம்மாள் வியாழக்கிழமை காலமானார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரியான மாரியம்மாள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பெரியார் நகரில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், வியாழக்கிழமை பிற்பகலில் இறந்தார். பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.19) மாரியம்மாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
On Friday, September 19, 2014 by Unknown in ,    
 



உடுமலை அருகே அமராவதி நகரில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், புதன்கிழமை நள்ளிரவில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமராவதி நகர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்திற்குள் கடந்த சில நாள்களாக சிறுத்தை ஒன்று, இரவு நேரங்களில் நடமாடி வருவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இந்த சிறுத்தை, இப்பகுதியிலுள்ள அமராவதி வனச்சரகர் மாரியப்பன் வீட்டில் இருந்த நாய், சைனிக் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டி ஆகியவற்றை கொன்று தின்றுள்ளது. இதனால் இப்பள்ளியில் தங்கி படித்துவரும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அமராவதி நகர் வனச்சரகத்திற்கு உள்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர், செல்வபுரம், பூச்சிமேடு, கரட்டுப்பதி, மீன் பண்ணை, பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட கிராம மக்களை உஷார் படுத்தும் நோக்கில் தண்டோரா போடப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், கடந்த 2 நாள்களாக அமராவதி நகரில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
புதன்கிழமை இரவு அனைத்துத்துறையினர் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள ஆய்வாளர் மாளிகையில் நடைபெற்றது. இதன் பிறகு, நள்ளிரவு 2 மணி வரை அமராவதி வனச்சரகப் பகுதிகளுக்குள் மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று ரோந்துப் பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது, எங்கெங்கு கூண்டு வைக்கலாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமரா பொருத்தவும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், உடுமலை கோட்டாட்சியர் நா.குணசேகரன், வட்டாட்சியர் எஸ்.சைபுதீன் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் 50- க்கு மேற்பட்டோர் ஆட்சியருடன் சென்றனர். இது குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதுமலை, சத்தியமங்கலம், வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள 5 கூண்டுகள் கொண்டு வரப்பட்டு, அமராவதி நகர் பகுதியில் வைக்கப்படும். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 கேமராக்கள் பொருத்தப்படும். ரோந்துப் பணிகளில் ஈடுபட மேலும் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை ஓரிரு நாள்களில் பிடிபடும் என நம்புகிறோம் என்றார்.
On Friday, September 19, 2014 by Unknown in ,    

கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்தப் புகாரை அடுத்து மடத்துக்குளத்தில், அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக, 18 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில், 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிமுக சார்பில் எஸ்.பழனிச்சாமி, பாஜக சார்பில் என்.முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தந்த வாக்குச்சாவடி முன்பு இரு கட்சியினரும் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கழுகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக பாஜக நிர்வா
கிகள் புகார் கூறினர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாஜக
நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்குள்ளும் மோதல் ஏற்பட்டது.
 இதில், பாஜகவைச் சேர்ந்த கழுகரை ஷாகுல்அமீது என்பவரது மகன் இம்ரான் (23) காயமடைந்தார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த கழுகரை திருமலைசாமி என்பவரது மகன் மனோஜ்குமார் (21), மனோகரன் என்பவரது மகன் பிரபாகர் (22) ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடுமலை டிஎஸ்பி பிச்சை தலைமையில் மடத்துக்குளம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென
அதிமுக, திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.