Friday, October 10, 2014

On Friday, October 10, 2014 by farook press in ,    
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க
கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்ப+ரில் திங்கட்கிழமை நடக்கிறது
   படித்த இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் திங்கட்கிழமை திருப்ப+ரில் நடைபெறுகிறது என்று திருப்ப+ர் மாவட்ட தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 
  திருப்ப+ர் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரையிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.25லட்சம் வரையிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையிலும் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வழங்கி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வழி வகை செய்யப்பட்டு வருகின்றன். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை சார்நத தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அரசின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்ப்பவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.லட்சம்சத்து 50 ஆயித்திற்குள் இருக்க வேண்டும். இது தவிர மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இதர திட்டங்களான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தபடுகின்றன. 
   இந்த திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் 13.10.2014 தேதியன்று திருப்ப+ர் அவினாசி ரோட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் பி.ரங்கசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் அசல் கல்விச்சான்றுடன் மேற்கண்ட நாட்களில் நேரில் வந்து ஆலோசனை பெற்று தொழில் துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களை திருப்ப+ர் மாவட்ட அவினாசி ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, October 09, 2014

On Thursday, October 09, 2014 by Anonymous   
On Thursday, October 09, 2014 by Unknown in ,    




On Thursday, October 09, 2014 by Unknown in ,    
Displaying NEWS 1 SETHU ENGG COLLEGE.JPGமதுரை அருகே சேது பொறியியல் கல்லூரியில் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்1, ப்ளஸ்2 மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி மற் றும் பிராஜெக்ட் போட்டிகள் அக்டோபர் 9,10 தேதிகளில் நடைபெற்றது .இதில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மா ணவிகளுக்கு கணித தலைப் பில் கணித விளையாட்டு, அறிவியலில் இன்றைய அறிவியல் என்ற தலைப்பில் பிராஜெக்ட்கள் இடம்பெற்றன ,மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ,விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ,கல்லூரி முதன்மை அலுவலர்கள் சீனி முகைதீன் ,சீனி முகம்மது ,முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி தலைவர் முகமது ஜலீல் தலைமையேற்று தொடங்கி வைத்தார் .மூன்று பரிசுகள் வீதம் ரூ.8 ஆயிரம், ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது ,ப்ளஸ்1, ப்ளஸ்2 மாணவர்களுக்கு கணித தலைப்பில் கணிதத்தின் வியக்கத்தக்க பண்புகள், இயற்கையில் கணிதம், இயற்பியல் தலைப்பில் மனிதனும் இயந்திரமும், இயற்பியலின் ஆச்சரியங்கள், வேதியியல் தலைப்பில் தினசரி வாழ்வில் வேதியியல், திட்ட உணவும் வேதியிலும், கணினியியல் தலைப்பில் கலந்துரையாடும் இணைய தள உருவாக்கம், அன்றாட வாழ்வில் கணினி ஆகிய தலைப்புகளில் பிராஜெக்ட்கள் இடம்பெற்றன வ்வொரு தலைப்பிற்கும் 3 பரிசுகள் வீதம் வெற்றி பெற்ற குழுவிற்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரத்து 500, ரூ.2 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டது .கல்லூரியை சார்ந்த கணித பேராசிரியர் முனைவர் லெட்சுமணன் ,கணேசன் ,லட்சுமி நாராயணன்,மீனாட்சி சுந்தரம் ,குரு பாஸ்கர் ,ஹரி குமார் ,மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்
On Thursday, October 09, 2014 by Unknown in ,    
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா, அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் பால்பழம் என்ற பழம் (வயது 37). கடந்த 13.10.2000 அன்று அதேபகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை கற்பழித்ததாக அவர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மகளிர் கோர்ட்டு, பால்பழத்துக்கு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், கற்பழிப்பு குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டு 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க 8.2.2006 அன்று உத்தரவிட்டது. மேலும், அந்த 2 குற்றச்சாட்டுகளுக்காகவும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பால்பழம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வி.கதிர்வேல், வக்கீல் பிரபு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:
மனுதாரர் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற போது சிறுமி சத்தமிட்டதால் மனுதாரர் தனது சட்டையை கழற்றி சிறுமியின் வாயில் வைத்து அமுக்கி கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த சட்டையை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால், அந்த சட்டை அவர் அணிந்து இருந்தது தானா? என்பதை நிரூபிக்க அந்த சட்டையின் காலரில் இருந்த டெய்லரிடம் விசாரணை நடத்தவில்லை. மருத்துவ அறிக்கையில் கற்பழிப்பு நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று சம்பவத்தின் போது அந்த சிறுமி அணிந்து இருந்த ஆடையும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவ அறிக்கையிலும், கற்பழிப்பு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது கற்பழிப்பு புகார் கூறி உள்ள சிறுமியின் சகோதரியும் அவரது அருகில் படுத்து தூங்கி உள்ளார்.
அவர்கள் 2 பேரின் சாட்சியங்களிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. போலீசாரின் விசாரணையிலும் பல குறைபாடுகள் உள்ளன. இதையெல்லாம் கீழ் கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. கீழ் கோர்ட்டு உத்தரவுப்படி மனுதாரர் அபராதம் செலுத்தி இருந்தால் அந்த தொகையை அவருக்கு திரும்ப வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
On Thursday, October 09, 2014 by Unknown in ,    
மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வழங்கப்பட்ட அநீதியை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்றது ..
On Thursday, October 09, 2014 by Unknown in ,    
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு பழமையான கோவிலில் இருந்து சாமி சிலைகள் திருடு போய் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சிலை விற்பனை தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பொருளாதார மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஜனார்த்தனன், ரவி, நடராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக சிலை கடத்தல் கும்பலுடன் இடைத்தரகர்கள் போல் ஆன்லைன் வர்த்தக பேரத்தில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் ஐம்பொன்னால் ஆன 2½ உயர முருகன் சிலை, தலா 2 அடி வீதம் வள்ளி, தெய்வானை சிலைகளும், 24 செ.மீ. நீளம் உள்ள பாம்புடன் கூடிய மயில் சிலை, 3அடி உயர திருவாச்சி ஆகியவை இருப்பதாகவும் கூறி விலை பேசினர். முடிவில் இவை அனைத்தும் ரூ.18 கோடிக்கு தருவதாக ஒப்புக்கொண்டனர். இதற்கு முன்பணமாக ரூ.50 லட்சம் தருவதாக பேசி முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மேலூர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்லவ ராயன்பட்டி என்ற இடத்தில் காரில் வந்து நிற்பதாகவும் அங்கு வந்து தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார், கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், உதவியாளர் மூர்த்தி ஆகியோருடன் மாறுவேடத்தில் ஒரு காரில் சென்றனர்.
அங்கு தயாராக நின்று கொண்டிருந்தவர்களிடம் சிலைகளை விலைக்கு வாங்க வந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதை நம்பிய அவர்கள் காரில் வைத்து இருந்த சாமி சிலைகளை காட்டினார்கள். உடனே போலீசார் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சிலை கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்களது பெயர் மதுரை அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் தினேஷ் (வயது28), திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் அப்துல் அஜீஸ் (25), திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து சங்கர்நகர் முருகன் மகன் சிவா (வயது25) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்தார்கள்.
இதில் தப்பி ஓடியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சிக்குட்டி (25) என்பதும், சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவன் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதையொட்டி சிலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களை மேலூர் போலீசாரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட முருகன் சிலை 18 கிலோவும், மற்ற சிலைகள் தலா 10 கிலோ வீதம் இருந்தன. இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
On Thursday, October 09, 2014 by Unknown in ,    
மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை பூங்கா முருகன் கோவிலில் கழக தொண்டர்கள் அங்கபிரதக்சனம் செய்தனர்..
Photo: மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை பூங்கா முருகன் கோவிலில் கழக தொண்டர்கள் அங்கபிரதக்சனம் செய்தனர்..
On Thursday, October 09, 2014 by Unknown in ,    
Photo: மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு  பூஜை செய்து வேண்டிகொண்டனர் ..மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பூஜை செய்து வேண்டிகொண்டனர்