Saturday, October 11, 2014
வால் நடிகையின் கவர்ச்சியை பபார்த்து ஆடிபபாய் இருக்கிறது தணிக்கை குழு. கதா நாயகியாக லட்சணமாய் வந்த இவரா அரை குறை ஆடையில் இவ்வளவு ஆபபாசம் காட்டுகிறார் என முணுமுணுக்கிறார்கள். தமிழில் மூடி மறைத்து வந்த அவர் தெலுங்கு பட மொன்றில் தான் இது பபால் கவர்ச்சியின் எல்லை வரை பபாய் தணிக்கை குழுவை அதிர வைத்து இருக்கிறார். கதாநாயகனுடன் நெருக்கத்தில் எந்த நடிகையும் செய்யாத அளவு துணிச்சல் காட்டியுள்ளார். சில காட்சிகளில் அரை நிர்வாணமாகவே கூட வந்தாராம். ஆபபாச நடிகை அளவுக்கு கீழ் இறங்கி நடித்துள்ள அந்த காட்சிகளை தணிக்கையாளர்கள் வெட்டி எறிந்து விட்டார்களாம். மார்க்கெட்டை தக்க வைக்கவும் சக நடிகைகள் பபாட்டியை சமாளிக்கவுமே இந்த அளவு கவர்ச்சிக்கு இறங்கி வந்துள்ளார் என்கின்றனர்.
‘ஐ’ படத்தை முடித்துள்ளார் விக்ரம். அடுத்து கோலி சோடா படத்தை எடுத்து பிரபலமான விஜய்மில்டன் டைரக்டு செய்யும் ‘10 எண்றதுக்குள்ளே’ என்ற படத்தில் நடிக்கிறார். தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் ஆக்க்ஷன் கதையே இப் படம். இதை முடித்து விட்டு அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க பச்சுவார்த்தை நடக்கிறது.
கத்தி’ படத்தில் விஜய் கேரக்டர் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் அவர் இரு தோற்றங்களில் வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்தில் வில்லனாகவும், நாயகனாகவும் இரு வேடங்களில் வந்தார். நாயகியாக நடிக்கும் சமந்தா தனது திரையுலக வாழ்க்கையில் ‘கத்தி’ முக்கிய படமாக இருக்கும் என்கிறார். இதை இந்தியில் ‘ரிமேக்’ செய்ய இப்போதே பேச்சு நடக்கிறது.
கொம்பன்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் லட்சுமிமேனன். இதில் திமிர் பிடித்த அடாவடி பெண் கேரக்டரில் வருகிறார். கிராமத்து கதையம்சம் உள்ள படம் என்பதாலும் தன் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாலும் இதில் மகிழ்ச்சியாக நடிப்பதாக கூறினார்.
இதில் லட்சுமிமேனன் தந்தையாக ராஜ்கிரண் வருகிறார். குட்டிப்புலி படத்தை எடுத்த முத்தையா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
இதில் லட்சுமிமேனன் தந்தையாக ராஜ்கிரண் வருகிறார். குட்டிப்புலி படத்தை எடுத்த முத்தையா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
சீனாவில் காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறிகுதிக்க முயன்ற மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் காதலனை சந்திக்க மாணவி ஜியோசின் மதில்சுவரை ஏறிகுதிக்க முயன்றுள்ளார். அப்போது மதில்சுவரில் பொருத்தப்பட்டு இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார். மாணவி ஜியோசின் உடல் மின்சார வேலியில் இறந்தநிலையில் சக மாணவர்களால் காலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக விடுதியில் மற்றவர்கள் ஊடுருவாமல் இருப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி ஜியோசின் யாரோ ஒருவரை சந்திக்க சென்றபோது உயிரிழந்துள்ளார் என்று அவருடன் படிக்கும் சக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜியோசினின் தோழி குயிங் வான் பேசுகையில், ஜியோசின் எங்கே சென்றார் என்று எனக்கு தெரியாது, அவர் என்னிடம் எதையும் கூறவில்லை. ஒருவேளை அவருடைய காதலன் அல்லது வேறு யாரேனும் ஒருவரை சந்திக்க வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கலாம். என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், வெளியாட்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்குள் வந்த சம்பவத்தை அடுத்து நாங்கள் மின்சார வேலியை அமைத்தோம். நாங்கள் மாணவர்களின் பாதுகாப்புக்காகவே அதனை செய்தோம். ஆனால் மாணவி ஒருவர் வெளியே செல்ல இந்த முயற்சியை செய்வார் என்று நாங்கள் கற்பனை செய்துக் கூடபார்க்கவில்லை. வேலியில் மின்சாரம் இருப்பது அனைவருக்கும் தெரியும். என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று இணையதள செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், வெளியாட்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்குள் வந்த சம்பவத்தை அடுத்து நாங்கள் மின்சார வேலியை அமைத்தோம். நாங்கள் மாணவர்களின் பாதுகாப்புக்காகவே அதனை செய்தோம். ஆனால் மாணவி ஒருவர் வெளியே செல்ல இந்த முயற்சியை செய்வார் என்று நாங்கள் கற்பனை செய்துக் கூடபார்க்கவில்லை. வேலியில் மின்சாரம் இருப்பது அனைவருக்கும் தெரியும். என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று இணையதள செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் இன்று பகல்–இரவு ஆட்டமாக நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேர்த்தியான ஆட்டத்தை கடைபிடித்தது. 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 116 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா தரப்பில் முகம்மது சமி 66 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க ஜோடி 8.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் பிரிந்தது. ரகேனா 24 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ராயுடு (2), ரெய்னா(0) தோனி (8) என அடுத்தது ஆட்டமிழந்ததால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவு நிலைத்து ஆடிய தவானும் 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க ஜோடி 8.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் பிரிந்தது. ரகேனா 24 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ராயுடு (2), ரெய்னா(0) தோனி (8) என அடுத்தது ஆட்டமிழந்ததால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவு நிலைத்து ஆடிய தவானும் 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
பெங்களூரை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரை பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து, அதை படம் பிடித்து, பணம் கேட்டு கன்னட துணை நடிகை நயனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிரட்டி உள்ளார். டாக்டரும் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து வந்துள்ளார். மேலும் மேலும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டவே ஐகிரவுண்டு போலீசில் டாக்டர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, நயனாவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் நயனா மீது வில்சன் கார்டன், மைக்கோ லே–அவுட் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகி இருந்தது.
தனது மீதான வழக்குகளில் ஐகிரவுண்டு, வில்சன் கார்டன் போலீசார் தன்னை கைது செய்யாதவாறு நயனா ஜாமீன் பெற்று இருந்தார். ஆனால் மைக்கோ லே–அவுட் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக நயனா ஜாமீன் பெறவில்லை. இந்த நிலையில், அவர் தனது அலுவலகத்துக்கு வந்தபோது, அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில், நயனாவின் கூட்டாளிகள் ரியா, மேகனா மற்றும் சுனில், ஹேமந்த், கே.ஜி.நகர் போலீஸ் ஏட்டு மல்லேஷ், ஜிம் ரகு ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மீதான வழக்குகளில் ஐகிரவுண்டு, வில்சன் கார்டன் போலீசார் தன்னை கைது செய்யாதவாறு நயனா ஜாமீன் பெற்று இருந்தார். ஆனால் மைக்கோ லே–அவுட் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக நயனா ஜாமீன் பெறவில்லை. இந்த நிலையில், அவர் தனது அலுவலகத்துக்கு வந்தபோது, அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில், நயனாவின் கூட்டாளிகள் ரியா, மேகனா மற்றும் சுனில், ஹேமந்த், கே.ஜி.நகர் போலீஸ் ஏட்டு மல்லேஷ், ஜிம் ரகு ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம் அருகே ஏ.டி.எம். காவலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார். கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை சத்யசாய்பாபா கோவில் அருகில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். மைய காவலாளி முருகன் கடந்த ஜூன் மாதம் 14–ந் தேதி நள்ளிரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் கருவியால் உடைக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் தீவிர விசாரணையில், ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் முக்கிய குற்றவாளியாக ஈடுபட்டுள்ளார் என்பதும் அவருக்கு துணையாக 3 பேர் இருந்ததும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
செங்கல்பட்டு பொன்விளைந்தகளத்தூர் சாலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார்(வயது 32) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் திருப்போரூர் மேலையூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் என்பவரது மகன் ஆவார்
மேலும் சதீஷ்குமாருக்கு துணையாக வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த அன்பழகன், திருநாவுக்கரசு, திருக்கழுக்குன்றம் தேவராஜ் ஆகிய 3 பேரும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இந்த 3 பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் உத்திரமேரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டார். சதீஷ்குமார் மீது ஏற்கனவே அவரது கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வழக்கு மற்றும் ஓட்டேரி, திருப்போரூர், மறைமலைநகர், மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள் திருட்டு என பல திருட்டு வழக்குகள் உள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன்(52). இவரது நண்பர் பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரது மனைவி சபியா சுல்தானா.
இவர்கள் தங்களது விவசாய நிலங்களை கோதண்டன் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுக்கும்படி குமாரவாடி கிராம நிர்வாக அலுவலர் கோ.தேவேந்திரனிடம் விண்ணப்பித்தனர்.அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். அதன்பின்பு ரூ.4 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. லஞ்ச பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட கோதண்டன் இதுகுறித்து காஞ்சீபுரம் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் நேற்று கோதண்டன் தேவேந்திரனிடம் ரூ. 4ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்பு போலீசார் தேவேந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...






.jpg)

