Monday, October 13, 2014
தாராபுரம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பரதநாட்டியம் மற்றும் தப்பாட்டம் பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்தது.
எழுத்தாளர் சங்கம்
மானுடத்தை போற்றுவதிலும், மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுப்பதிலும், சுரண்டலுக்கு எதிராகவும், இந்தியாவின் இயற்கை வளங்கள் தனிநபருக்கு சென்று சேருவதை தடுக்கவும் சமுதாயத்தில் கலாச்சார வேர் கரையான் அரிக்கப்படும் போதெல்லாம், தனது எழுத்து வன்மையால் பண்பாட்டு விழுமியத்தை காக்க குரல் கொடுக்கும் இயக்கம் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் ஆகும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தாராபுரத்தில் தொடங்கப்பட்டு ஓராண்டாகிறது.
இந்த விழாவை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவியரங்கம், கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தாராபுரம் அண்ணாசிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக தாராபுரம் ஆ.செல்வி நாட்டுப்புற பாடலை பாடி தனது காந்தக்குரலால் அனைவரையும் கட்டிப்போட்டார். பாரதி படல் முதல் தற்போதைய கலியுக கவிஞன்வரை தனது பாடலில் எடுத்துக்கூறி அனைவரையும் ஒருகனம் சிந்திக்க வைத்தார். அடுத்து "தகதிமிதா" நாட்டியாலயா சிறுமிகள் ஆடிய பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக "விஷமகார கண்ணன்" என்ற பாடலுக்கு மாணவிகள் ஆடியவிதம் அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
மாணவர்கள் நடனம்
பின்னர் "இலாஸ் அமேசிங் பீட்" குழு பெயரில் கோவை அரசு கலைக்கலூரி மாணவர்கள் ஆடிய நவீன ஆட்டம் பார்வையாளர்களை திணற வைத்தது. உடம்பில் எலும்பு இருக்கிறதா? என்று அனைவரும் யோசிக்கும் வண்ணம் வளைந்து நெளிந்து ஆடி அனைவரின் கைதட்டலையும் பெற்றனர்.
அடுத்த நவரச நிகழ்ச்சியாக திருப்பூர் சிறுவர் தப்பாட்ட குழுவினரின் தப்பாட்டத்தை பார்வையாளர்கள் விழி பிசகாமல் பார்த்து மகிழ்ந்தனர்.
அதை தொடர்ந்து மானுடம் காப்போம் என்ற தலைப்பில் ஸ்டீபன் சாந்தப்பனும், சிறகுகள் விரியட்டும் என்ற தலைப்பில் விஜயகுமாரும் கவிதை வாசித்தனர். முடிவில் சைவம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கணேஷ்குமாரும், இஸ்லாம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் ஜாகீர் உசேனும் உரையாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகள்
தாராபுரத்தில் தமிழ்நாடு எழுத்தார் முற்போக்கு முன்னதாக நடைபெற்ற எழுத்தாளர்–கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் மேகவர்ணன் தலைமை தாங்கினார். பட்டு வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். கிளை செயலாளர் சீரங்கராயன், மாவட்ட செயலார் ஈசுவரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமாறன் தனது பிறந்தநாளையொட்டி அவரும், அவரது நண்பர்களும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் சத்தம் போட்டு கொண்டாடினர். இந்த சத்தம் அப்பகுதியில் வசித்துவரும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைதொடந்து சிலர் அவர்களிடம் சென்று சண்டை போட்டனர். இதற்கு பட்டாசு வெடித்தவர்கள் மன்னிப்பு கேட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாமல் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு பின்னர் கிரிக்கெட் மட்டை மற்றும் கம்புகளால் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்களை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்சை ஒருதரப்பினர் தடுத்து காயம்பட்டவர்களை ஏற்ற விடாமல் திருப்பி அனுப்பினர். பின்னர் காயம் அடைந்தவர்களுக்கு அவினாசி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து அங்கு வந்த உதவி கமிஷனர் ஜெயசந்திரன் அவர்களை சமாதானம் செய்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஏட்டு அற்புதம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்டதாக மனோஜ்குமார், நடராஜ், சிவசாமி, வேலுசாமி, ராசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்படி மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை தலைமையில் மெட்ராத்தி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மணிகவுண்டர், சாமியப்பன், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்புச்சாமி, ஆறுச்சாமி உள்பட திரளான அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார். இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சிங்கராஜ் திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். இவருக்கு சக நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள், வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பதவி ஏற்ற நீதிபதி சிங்கராஜ் 1998 –ல் சேலம் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதியாக பணியை தொடங்கினார். பின்னர் திருச்சி மற்றும் பெரியகுளத்தில் ஜே.எம்.1 நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2008–ல் அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிந்தார். 2010–ல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2011–ல் பெரியகுளத்தில் சப்–ஜட்ஜ் ஆக பணிபுரிந்தார். இதைதொடர்ந்து பதவிஉயர்வு பெற்று நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப்பெருமானின் அறுபடை வீடு கோவில்களுக்கு சென்று மொட்டையடிப்பதற்காக தமிழக சட்டசபை துணை சபாநாயகரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆலோசனைப்படி உடுமலை நகராட்சி துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமையில் 54 பேர் கடந்த 7–ந்தேதி உடுமலையில் இருந்து புறப்பட்டனர்.
அவர்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோவில்களுக்கு சென்றனர். ஒவ்வொரு கோவிலிலும் 9 பேர் வீதம் மொத்தம் 54 பேர் மொட்டை போட்டனர். பின்னர் அவர்கள் உடுமலைக்கு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலளார் கே.ஜி.சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் அறுபடை வீடு கோவில்களுக்கு சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தியவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.மணிவாசகம், யு.கே.பி.ராதாகிருஷ்ணன், நகர கழக மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குனர் பி.சிதம்பரநாதன், நகர பேரவை செயலாளர் வி.என்.வெங்கடேஷ், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வி.ஆர்.வேலுச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.ஆறுமுகம், ஜி.தனலட்சுமி, மாவட்ட பேரவை துணை தலைவர் எஸ்.ரகுபதி, பனியன்துரை, கே.குமரேசன், ஜெ.மணிவண்ணன், உ.மா.குப்புசாமி, கே.ஆர்.பி.பாஸ்கர், சென்னை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரளாவை சேர்ந்த சஜீத் முதல் பரிசு பெற்றார்.
உடுமலை பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 7–வது ஆண்டு மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையை அடுத்துள்ள சின்னவீரம்பட்டியில் நேற்று நடந்தது. போட்டிகளை உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகராஜன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சவுந்திரராஜன் வரவேற்றார்.
போட்டிகள் இந்தியன் ஓபன் கிளாஸ், ஓபன் கிளாஸ், எக்ஸ்பர்ட் கிளாஸ், நோவைஸ் கிளாஸ், பிகினர்ஸ் உள்ளிட்ட 8 பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டிகளில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் வீரர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சீறி பாய்ந்தனர். இலக்கை சென்றடைய மண்ணில் புழுதியை கிளப்பியபடி சென்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தியன் ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த சஜீத்திற்கு முதல் பரிசாக பி.எம்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கோவை போத்தனூரைச் சேர்ந்த ஆனந்த்துக்கு 2–வது பரிசாக ரூ.8 ஆயிரமும், கேரளாவை சேர்ந்த மகேஷ்க்கு 3–வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த மகேசுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சஜீத்துக்கு 2–வதுபரிசாக ரூ.5 ஆயிரமும், கோவையை சேர்ந்த ஜெகதீசுக்கு 3–வது பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டது.
எக்ஸ்பர்ட் கிளாஸ் போட்டியில் சஜீத்துக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரமும், மகேசுக்கு 2–வது பரிசாக ரூ.5 ஆயிரமும், கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்துக்கு 3–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், நோவைஸ் கிளாப் போட்டியில் கோவை வீரர்களான எஸ்.பாண்டியனுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரமும், நவநீதனுக்கு 2–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3–வது பரிசாக விக்ரமுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.
Sunday, October 12, 2014
On Sunday, October 12, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்தனை .
மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா பொய் வழக்கிலிருந்து விடுபட,வழக்கை ரத்து செய்யக்கோரியும் அ .இ. அ. தி. மு..க கழகபொதுக்குழு உறுப்பினர் மற்றும் உடுமலை நகர் மன்ற துணைத்தலைவருமான M .கண்ணாயிரம் மற்றும் கழக உடன் பிறப்புக்கள் 54 பேர்கள் திருத்தணி,சுவாமிமலை,திருப்பரகுன்றம்,பழமுதிர்சோலை,திருச்செந்தூர்,பழனி ,ஆகிய கோவில்களில் அம்மா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து முடி காணிக்கை செலுத்தி வழிபட்டனர்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...




