Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in ,    
அங்கன்வாடி மையம்எம்.எல்.ஏ., திறப்பு                    லாலாபேட்டை: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கட்டிட திறப்பு விழா திருக்காம்புலியூர் பகுதியில் நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டபை தொகுதிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எழுதியாம்பட்டி பகுதியில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ., காமராஜ் திறந்து வைத்தார். அதேபோல், முத்துரெங்கம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், 5.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். திருக்காம்புலியூர் பஞ்சாயத்தில், 9.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பணிகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில், தொகுதி எம்.எல்.ஏ., காமராஜ், யூனியன் சேர்மன் முத்துசாமி, பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர் பழனிசாமி, பி.டி.ஓ., அன்புமணி, குழந்தைகள் திட்ட மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்..

Sunday, November 02, 2014

On Sunday, November 02, 2014 by farook press in ,    
உயிரிழந்தார். அம்மா அவர்கள் உத்தரவுப்படி வரதைய்யகவுடரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஆதிராஜாராம், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்கள். உடன் அவினாசி எம்.எல்.ஏ.,அ.அ.கருப்பசாமி, திருப்பூர் துணை  மேயர் சு.குணசேகரன், அந்நூர் ஒன்றிய செயலாளர் .காளியப்பன், நகர செயலாளர் சவுகத்  அலி, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், நிலைக்குழு  தலைவர் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்
On Sunday, November 02, 2014 by farook press in ,    
ஊத்துக்குளியில் எஸ்.மாருசாமி, வி.ஆர்.பழனிசாமி நினைவரங்கில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி மற்றும் கண்ணையன் ஆகியோர் தலைமைக்குழுவாகச் செயல்பட்டனர். மூத்த தோழர் செ.நடேசன் செங்கொடியை ஏற்றி வைத்தார். வி.கே.பழனிசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆர்.மணியன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை ஆற்றினார். ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி வாழ்த்திப் பேசினார்.
இம்மாநாட்டில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், ஊத்துக்குளியில் 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரம் நிறுத்தி வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும், செங்கப்பள்ளி கூட்டுறவு சங்க நகை கடன் மோசடியில் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உடனடியாக நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும், பல்லகவுண்டம்பாளையத்தில் நால்வழி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாப்பம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் ஊத்துக்குளி ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். முடிவில் கே.பெரியசாமி நன்றி கூறினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய நான்காவது மாநாட்டை ஞாயிறன்று தொடங்கி வைத்து பேசுகிறார் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ். உடன் ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார், மாநாட்டு தலைமைக்குழு உறுப்பினர்கள் ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி, கண்ணையன் உள்ளிட்டோர்     மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர்
On Sunday, November 02, 2014 by farook press in ,    



மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சி.கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் முருகன், அண்ணா தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் மணி, மார்க்கெட்  சக்திவேல்,சடையப்பன், கோகுல், ராஜ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் போஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Sunday, November 02, 2014 by farook press in ,    
ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி பல்லடத்தில் நடை பெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில்வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு டி.எஸ்.பி.சுரேஷ்குமார் பரிசு வழங்கி பாராட்டினார் அருகில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமாணதாஸ், காளியண்ணன் ஆகியோர் உள்ளனர்.
On Sunday, November 02, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, தாசில்தார் சைபுதீன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


On Sunday, November 02, 2014 by Unknown in    
மடத்துக்குளம் நரசிங்காபுரத்தை சேர்ந்த அ. தி. மு. க. தொண்டர் தீக்குளித்து இறந்தவர்   குடும்பத்துக்கு ரூபாய் 3 லட்சம் நிதி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் .
 

திருப்பூர்     மாவட்டம்     மடத்துக்குளம்    நரசிங்காபுரத்தை    சேர்ந்த வீரமணி அ. தி .மு க . பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் மனமுடைந்து தீக்குளித்து இறந்தார். வீரமணியின் குடும்பத்திற்கு அ. தி. மு. க. சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது .வீரமணியின் மனைவி கலாமணியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது. அதற்கான காசோலை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் உடன்
 சி.. சண்முகவேலு  M. L. A ,  பொள்ளாச்சி    பாராளுமன்ற     உறுப்பினர்
 C. மகேந்திரன் M. P ,அரசு கேபிள் டி. வி  கே .ராதாகிருஷ்ணன் S. இன்பதுரை,   சிறுபான்மை   நலப்பிரிவு   மாநில துணை  செயலாளர  M அப்துல்ஹமீது ,அண்ணாதொழிர்சங்கபேரவைபொருளாளர்மற்றும்பல்லடம்சட்டமன்ற
உறுப்பினர்பரமசிவம்.உடுமலை நகர்மன்றதுணைத்தலைவர்  M.கண்ணாயிரம் ,மடத்துக்குளம் பேரரூராட்சி தலைவர் S. பழனிச்சாமி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமலைசாமி மடத்துக்குளம் பேரரூராட்சி துணைத்தலைவர் G. K. தண்டபாணி,கணியூர் பேரரூராட்சி தலைவர் தேவி,மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர் 
On Sunday, November 02, 2014 by Unknown in ,    

கரூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பயிற்சி முகாம்                                                 கரூர், :  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த பயிற்சி முகாமை அரெட்ஸ் தொண்டு நிறுவனம் கரூர் பசுபதிபுரம் கள அலுவலகத்தில் நடத்தியது. இதில் 112 பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறுவயதிலிருந்தே குழந்தை வளர்ப்பில் அக்கறை எடுக்கவேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ லட்சுமி, தலைமைக்காவலர் விஜயலட்சுமி, முத்துலட்சுமி, கலந்து கொண்டனர்.                                    

On Sunday, November 02, 2014 by Unknown in ,    

கரூர் மாவட்டத்தில்  அரசு கல்லூரி மாணவர்கள் ஒருமைப்பாடு தின பேரணி....                                                                 அரசு கலைக்கல்லூரியில் வல்லபாய்படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒருமைப்பாட்டு தின பேரணி நடைபெற்றது.

 சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி நேற்று கரூர் அரசுகலைக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பேரணி நடத்தினர். 
250 மாணவ மாணவிகள், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
 கல்லூலூரி முதல்வர் பாரி, மாணவர்கள் தேச ஒற்றுமையை காக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்க செய்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரியில் இருந்து பேரணி கரூர் சுங்ககேட் வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. 

பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுந்தரராஜ், துரைப்பாண்டி, செல்வகுமார், லட்சுமணசிங், மகாலட்சுமி ஆகியோர் வழி நடத்தினர்.