Saturday, March 14, 2020

On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலணி உள்ளது. இந்தப் பகுதி காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நீர்நிலைகளில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் இந்தக் கரையில் தற்போது தனியார் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காண உள்ளது. இந்நிலையில் காவிரிக்கரையில் கட்டுமான பணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

பேட்டி:
திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச் சங்கத் தலைவர் திருவேங்கடம்
On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறி

கேரளாவுக்கு சென்று வீடு திரும்பிய போது அவருக்கு  காய்ச்சல் ஏற்பட்டதால் ,  கல்லூரி விடுதியில் இருந்து உடனே  அவர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில்  கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .  தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று திரும்பிய நிலையில் அம்மாணவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்தியாவிலும்  இந்த வைரஸ் பரவி வருகிறது .  இந்நிலையில் திருச்சி  புத்தூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில்,  கொரோனா நோய் பாதித்தவருகளுக்கு  சிகிச்சைக்காக சிறப்பு வார்டு  ஏற்படுத்தப்பட்டுள்ளது .  இந்நிலையில்  திருச்சியில்  விமான நிலையம் உள்ளதால் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றனர்

அதில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் ,  அதாவது,   சளி ,  இருமல் ,  மூச்சுத் திணறல் ,  இருப்பது தென்பட்டால் அவர்கள் உடனே தனி வாகனத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் .  கடந்த 30 நாட்களில் 12 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வீடு  திரும்பியுள்ளனர் .  இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு மலேசியாவில் இருந்து திருச்சி வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆருகே உள்ள பரம்பூர் என கிராமத்தை சேர்ந்த ஈஷா அனிபா என்ற இரண்டு வயது  குழந்தை சளி காய்ச்சல் தொற்றுஅறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி-    

புதுகை சத்தியமூர்த்தி எல்பின் நிறுவனம் குறித்து அளித்த  புதிய தகவல்கள்




 நேற்று சென்னையில்
பெரிய அளவில் கூட்டம் நடைபெற்றது


 அதில் எல்ஃபின்  நிறுவனத் தலைவர் ராஜா அவர்கள் மதுரை குற்ற பொருளாதாரப் பிரிவில் நேற்று ஆஜராக வேண்டும் என்று காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது ஆனால்

காவல்துறையை மதிக்காமல்  காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாமல் நேற்று  சென்னையில் பெரிய அளவில்பண  பரிமாற்றங்கள் மற்றும் அதன் விபரம் குறித்தும் கூட்டம் நடத்தியுள்ளனர் வருகின்ற


மே 15 அன்று  அழகர்சாமி என்கிற ராஜாவிற்கு பிறந்தநாள் வருகிறது அதனை முன்னிட்டு புதிய கட்சி ஒன்று ஆரம்பிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன மேலும் அன்று தபால்தலை வெளியிடவும் ஏற்பாடு செய்து வருகின்றனர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ள நிலையில் இவர்கள் தபால் தலை வெளியிடுவது என்பது வருத்தமாக உள்ளது ஏனெனில் தபால் தலை என்பது மதிக்கத்தக்க ஒருவருக்கு அரசால் அறிவிக்கப்படும் கவுரவமாக கருதப்படுகிறது

  இவர்களுக்கு இவர்களே பணம் கொடுத்து டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வதும் தபால் தலை வெளியிட்டு கொள்வதும் நினைக்கையில்   நகைச்சுவையாகவும் உள்ளது .


ஒன்றுக்கு 3 பங்கு தருவது ஒரு லட்சம் என்றால் மூன்று லட்சம் தரப்படும் என்று அழகர்சாமி என்கிற ராஜா அறிவிப்பு கொடுத்துள்ளார்
மத்தியஅரசு இப்படிப்பட்டஅறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று  கூறினாலும்  ஒன்றுக்கு மூன்று தருவதாகக் கூறி தொடர்ச்சியாக அறிவிப்புகள் அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் பல்வேறு வழக்குகள் இவர்கள்  மீது நிலுவையில் உள்ள நிலையில் தனிமனிதன் இப்படிப்பட்ட அறிவிப்பு கொடுப்பது என்பது சட்டத்திற்குப் புறம்பானது  என்பது  எல்லோரும் அறிந்தது இவர்கள் நிறுவனத்தில் சேரும் ஒவ்வொரு மனிதருக்கும் இவர்களால் ஒன்றுக்கு 3 என்ற விகிதத்தில் பணம் தர முடியும் என்பது சாத்தியமானால் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் இத்திட்டத்தில் சேர்ந்தால் இவர்களால் பணம் தர இயலுமா அரசாங்கத்திற்கு  இல்லாத அக்கறையும் பணமும்  இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது    தற்போது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து காவல்துறையை சமாளிக்கலாம் என்றும் மோசடி வழியில் ஒவ்வொரு நாளும் புதிய வழியில் பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒரு வழியை கையாண்டு கொண்டே உள்ளனர் உண்மை தன்மை அறியாத மக்களே இறுதியில் ஏமாந்து போகிறார்கள்  மேலும் இவர்கள்
புதிய கம்பெனி ஒன்று தொடங்குவதாக கூறிவருகின்றனர்  
மைக்ரோ பைனான்ஸ் திட்டம் வகுத்துள்ளனர் அதாவது ஒவ்வொரு கிராம வாரியாக பெண்களிடையே இத்திட்டம் சென்றடைய வேண்டும் அதாவது மாடு வளர்ப்பு திட்டம் இப்படியெல்லாம் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்து மக்களிடையே கொண்டு செல்கிறோம் என்று மக்களை ஏமாற்றி தான் வருகின்றனர்   தற்போது ஷோரூம் திறப்பதற்கான  முயற்சிகள் முடிவடைந்துள்ளன இதிலும் பெரிய அளவில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது
மக்களை திசைதிருப்பி கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றனர் காவல்துறையில்  அதிகாரிகள் இன்றைக்கும் நேர்மையான முறையில் செயல்பட்டு தான் வருகிறார்கள் இவர்களை அரசும் காவல்துறையும் உற்றுநோக்கி தான் வருகிறது விரைவில் இவர்கள் சிக்குவார்களா படித்த மக்களும் பாமர மக்களும் ஏமாற்றப்படக் கூடாது என்பதே என் நோக்கமாகும் என்று சத்தியமூர்த்தி தெரிவித்தார் மேலும் பொதுநலன் கருதி எல்பின் நிறுவனம் குறித்த மோசடி உண்மைகளை பொதுநலன் கருதி நான் வெளியிடும் தகவல்களை செய்தியாக வெளியிடும் செய்தியாளர் சபரிநாதன் அவர்களும் இவர்களால் இன்றளவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் வருகிறோம் இவர்கள்  இருவர் மட்டும் தானே என்று எதேதோ வழியில் எங்களுக்கு பொய் வழக்குகள் கொலை மிரட்டல்கள் போன்றவற்றை செய்திதான் வருகின்றனர் தமிழகம் முழுவதும்  எங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட  பல்வேறு வழக்குகள் உள்ளன இதில் இவர்கள் 101வது கொலை வழக்காக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று எல்பின் நிறுவனத்தை நம்பி இருக்கும் புதிய பத்திரிக்கையாளர்  சங்கத்தினர் இடம்  எல்பின் சகோதரர்கள் கூறியுள்ளனர்   இருந்தபோதிலும் எங்களுக்கு கட்டாயம் நம்பிக்கை இருக்கிறது  காவல்துறையின் உதவியுடன் ஒரு சிறிய  உண்மைதான் பெரிய மோசடி கும்பலுக்கு முடிவு கட்டும்

Friday, March 13, 2020

On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 13

டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்லாமிய அமைப்பன் மாநில நிர்வாகிகள் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன போராட்டம்

இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. என்.சி.ஆர், என்.பி.ஆ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமென பொய்யாக தொடர்புபடுத்தி கைது  செய்து வருகின்றனர். சங்பரிவார் மற்றும் டெல்லி காவல்துறை இருவரும் இதற்கு பொறுப்பாவர்கள்.


ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான ஈடுபட்டிருந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல்துறையால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் டானிஷ் கைது செய்யப்பட்டார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அவதூறு செய்வதற்கான தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த போக்கை கண்டித்து
மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகில்  மாவட்டச் செயலாளர்,
முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ,
கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் SDPI மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் 200க்கு மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.

பேட்டி :
முஜிபுர் ரஹ்மான்
மாவட்ட தலைவர் .
பாபுலர் பரண்ட்ஸ் ஆஃப் இந்தியா


On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக நடவடிக்கை


திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணியிடமாற்றம் ஆக அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு ஊருக்கு மாற்றப் பட்டுள்ளார் .

 அதற்கு மாறாக கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் மணச்சநல்லூர் ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 துறையூர் ஆய்வாளர் குருநாதன் லால்குடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா துறையூர் காவல்துறை ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி வடக்கு மண்டலத்தில் மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் லட்சுமி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி முதலமைச்சராக பதவியேற்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை கட்டாயமாக இன்று அறிவித்து விடுவார் என்ற ஆவலில் திருச்சி ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர், சிந்தாமணி அண்ணாசிலை அருகேயும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையடுத்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரஜினி பேசிய பேச்சு, அறிவிப்புகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த பட்டாசுகளை வெடிக்காமல் திருப்பி எடுத்துச் சென்றனர். அதேபோல் இனிப்புகளையும் வழங்காமல் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எங்களது தலைவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம். இதற்காக காலை 5 மணி முதல் காத்திருந்தோம். அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்து விட்டார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.


தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். இரண்டு ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். அந்த துணிச்சல் இருப்பதால்தான், நாங்கள் அவர் பின்னால் நிற்கிறோம். அவர்களை எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தேர்தல் நேரத்தில் எங்களது பணியை அவர் பார்ப்பார். அவர் வந்தால் நன்றாக இருக்கும். வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்.

ரஜினி வந்தால் ஓட்டு போடுவோம் என்று பெண்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ரஜினி கைகாட்டும் ஆளுக்கு ஓட்டுப்போட நாங்கள் தயாராக இல்லை என்று கூறுகின்றனர். அவர் கூறிய வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியுமே தவிர, வேறு யாராலும் நிரப்ப முடியாது. மன்ற நிர்வாகிகளுக்கு பதவி இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், அவர் முதலமைச்சராக ஆட்சியில் அமர வேண்டும். அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி' என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொதுமக்களை விட அவரது ரசிகர்கள் இதை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அவரது இன்றைய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
மாண்புமிகு உயர் நீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் எதிர்தரப்பினர் கட்சி பிரமுகர்கள் மதிக்கவில்லை ஊர் மக்கள் கதறல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் கீழ அன்பில், கோட்டைமேடு, ஜெங்கமநாதபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, படுகை, பராமங்கலம் ஆகிய 7 கிராமங்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக்  கோவிலில் மாசி மாதம் தோறும் திருவிழா நடைபெறும்.

அப்போது அம்மன் வீதி உலா வந்து கிடா வெட்டு நடைபெறும். இந்த வகையில் கடைசியாக கடந்த 1993 ஆம் ஆண்டு மாசி திருவிழா நடைபெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதி உலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. பழைய முறைப்படியே திருவிழா நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து 27 ஆண்டுகள் கழித்து தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக  வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில்  அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள்  அம்மன் கொண்டு செல்லாமல் ஒரு பொது இடத்தில் வைத்து அனைவரும் வழிபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. ஆனால் பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்த அந்த சமூக மக்கள் மறுப்பு தெரிவித்தனர். தங்களது பகுதிகளிலும் அம்மன் வீதிஉலா நடைபெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே அம்மன் வீதிஉலா உலா நடைபெற்றது. ஆனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதிஉலா நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர். இதை கண்டித்து லால்குடி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. எனினும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மக்களை சமாதானப்படுத்தினர்.

Thursday, March 12, 2020

On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை தொடர்ந்து

இஸ்லாமியர்கள் திருச்சி பால்பண்ணை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முடங்கிக் கிடக்கின்றன


பழைய பால்பண்ணை முழுவதும் முடங்கிக் கிடக்கின்றன போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு செய்கின்றனர் அங்கு பதற்றம் ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இரவு 11 அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விடியற்காலை 3 மணி வரை நீடித்தது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சுமூக பேச்சுவார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்
On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்

 ( இப்படி ஒரு பெயர் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

பல்வேறு வகையில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வருபவர்கள் எல்பின் மற்றும் அறம் மக்கள் நல சங்க இயக்குனர்கள் அழகர்சாமி ( எ ) ராஜா, எஸ்ஆர்கே ( எ ) ரமேஷ்குமார்.
எல்பின் நிறுவனத்தின் பெயரில் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மகாபலிபுரம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறையினரை மீறி கூட்டம் நடத்த உள்ளனர். ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறை நுழைய அனுமதி இல்லை என்பதால் மகாபலிபுரத்தில் தேர்ந்தெடுத்து அங்கு கூட்டம் நடத்த உள்ளனர்.
இதனிடையே மதுரையில் காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையாக எல் பின் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். தஞ்சை போலீசாரை சமாளித்து அங்கு கைதானவர்களை வெளியில் எடுத்தது போல் மதுரை போலீசாரையும் ( 💵💵💵 )சமாளித்து மீண்டும் மக்களுக்கு நாம் நன்மை செய்வோம் என அவர்கள் உறுப்பினர்களிடையே தகவல் பரப்பி வருவதாக ஓர் தகவல்.
அதேபோல் இன்று ஓர் பத்திரிக்கை சங்கத்தை அழைத்து தங்கள் எல்பின் நிறுவனத்துக்கு ஆதரவாக நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு அனைத்தையும் செய்கிறேன் நாங்கள் தயாராக உள்ளோம் என எஸ்ஆர்கே (எ) ரமேஷ்குமார் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அடைந்தே தீருவார்கள் என்பது ஆண்டவன் முடிவு. மதுரை போலீசாரை பணத்தால் சமாளிப்பார்களா    வேறு வழியில் அமைதிப் படுத்துவார்களா ? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு