Tuesday, April 21, 2020

On Tuesday, April 21, 2020 by Tamilnewstv in    
தனி ஒருவர் வெளியில் நடமாடும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் மாண்புமிகு தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளனர்

                     
அறம் மக்கள் நலச்சங்கம் என்ற பனியன் அணிந்து இருக்கும் பொழுது ஏன் முக கவசம் அணிய வில்லை? சமூக இடைவெளி பின்பற்றவில்லை? இது அந்த நிறுவன தலைவருக்கு பொதுச் செயலாளருக்கு தெரியாதா?  பொதுச் செயலாளருடன் நின்று புகைப்படமும் எடுத்து உள்ளனர் இது முறையா? மக்கள் நல சங்கம் என்ற பெயரில் அரசு விதிமுறைகளை பின்பற்றாதது ஏன்? 




அரசு அனுமதி இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதா? அரசு அதிகாரிகள் யாராவது உடன் இருந்தார்களா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது? பொது இடத்தில் பொது மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் பொழுது முக கவசம் அணியாமல் நலத்திட்ட உதவிகளில் கலந்து கொள்ளலாமா?


தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல் பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி பல்வேறு மாவட்டங்களிலும் திருச்சியிலும் தஞ்சையிலும்  வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி பொதுச் செயலாளர் எஸ்ஆர்கே என்கிற ரமேஷ் க்குமார் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து 50 லட்ச ரூபாய் கொடுத்தனர். மேலும் இவர்கள் தங்கள் தங்கியுள்ள வீட்டின் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி தங்களின் தங்கியுள்ள வீட்டில் முன்பு 500க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்ததால் அதன் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையால் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு மாநில அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இன்றுகூட திருச்சி மாநகர காவல் துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து சிறப்பு குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத எல்பின் நிறுவனத்தினர் இலவச பொருட்கள் நாங்கள் தருகிறோம் என விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் முறைப்படி மாஸ்க்  மற்றும் கையுறை அணிந்து சமூக இடைவெளி விட்டு நின்று பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கலாம், ஆனால் உண்மையில் வைரஸ் பரவுவதை பற்றி ஒன்றும் அறியாத அந்தநல்லூர் மருதாண்டா குறிச்சி கிராம மக்களை ஒன்று கூட்டி வைரஸ் பரவ செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது ? முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்றார்கள் என்பது தெரியவில்லை? தொடர்ச்சியாக சமூக இடைவெளி இல்லாமல் இவர்கள் செயல்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 இதற்கு உதாரணம் இன்று மருதண்டகுறிசி ஊராட்சியில் எஸ்,ஆர்,கே,ரமேஷ், பால்ராஜ், மக்கள் ராஜ்யம் பிஆர்ஓ கோவிந்தன் சில பிரபல கட்சி நிர்வாகிகள்  நலத்திட்ட பொருட்கள் மற்றும் தலைக்கு ரூபாய் 100 வழங்கியுள்ளனர்.

 இது பொதுமக்களும் அரசாங்கத்தின் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்துள்ளனர் .

 சமீபத்தில் இவர்கள் துபாய் சென்று வந்து இருந்தனர் இதைப்பற்றி நாம் செய்தி வெளியிட்ட பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுத்து  அனைவரையும் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தார். இவர்களுக்கு கொரோனா  தொற்று இல்லை என்று எத்தனை சோதனை  செய்ய பட்டு உள்ளது என்று தெரியவில்லை ?

இவர்கள் அனைவரையும் மீண்டும் புதிய ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளதா என்றும் தெரியவில்லை? வைரஸ் தொற்று இல்லை என்று  அறிந்த பின்பு  பொதுமக்களுக்கு நேரடியாக வந்து உதவி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று உள்ளார்களா? என்று தெரியவில்லை? காவல் துறையிடம் அனுமதி பெற்றுதான் செய்திருக்க வேண்டும் அனுமதி பெற்றார்களா அதுவும் தெரியவில்லை?

அப்படி அனுமதி இல்லாமல் உதவி என்ற பெயரில் வைரசை பற்றி விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களிடம் சமூக இடைவெளியில்லாமல் நலத்திட்ட உதவி வழங்கியதற்கு இவர்கள் மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்து உடனடி நடவேடிக்கை எடுத்து அப்பாவி பொதுமக்களை காக்க வேண்டும். கொரோனா பரவினால் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நோயை  தடுக்க படும் கஷ்டங்கள் அனைத்து  வீணாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
On Tuesday, April 21, 2020 by Tamilnewstv in    
காகம் மற்றும் எலிகள் தவிர்த்து மற்ற எந்த விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகிய எதை பிடிக்க முயற்சித்தாலும், வேட்டையாடினாலும் குற்றமே என்பதன் அடிப்படையில்

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்,வனவா்கள்,மதன்ராஜ், சரவணன்   மற்றும் வனக்காப்பாளர்கள்
சரவணன், ரவி, ஞானசம்மந்தம்  ஆகியோர்  (வனத்துறையின்) ரோந்து பணி சோதனை மேற்கொண்டபொழுது மணச்சநல்லுா், வலையூர் கிராமத்தை சாா்ந்த 1. ஜெயபாலன் (35), 2.கோபிநாத் (38), மற்றும்
3.கோபிநாதன் (35) ஆகிய மூன்று நபர்கள் விவசாய நிலத்தில் முயல் பிடிக்க கன்னி சரம்(Trap) வைத்திருந்தது தெரிய வந்தது. மேற்கண்ட மூவர்களை பிடித்து விசாரணை செய்த போது வேட்டைக்காக கன்னி வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

மேற்காணும் சம்பவம் தொடா்பாக  வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின்  படி வேட்டையாட முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் மாவட்ட வன அலுவலர், சுஜாதா IFS  உத்தரவின் படி ரூபாய்.15,000/- இனக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

Monday, April 20, 2020

On Monday, April 20, 2020 by Tamilnewstv in    
Dear Canpals,

*Canpal Activity - Madurai Region*

Today we had provided good amount of essential  food items to *"Bharathi old age home"* at Palanganatham  Madurai.

The response from those elders was heart melting. And a 90+ grand old mother blessed us and our CBOA.

*We thank each and every Canpal who contributed and stood for the humanity*



Our service to the poor and needy continues.......

*CBOA - Team Madurai*



TRICHY


*Dear Friends,*
*⭐HELPING HANDS NEVER HESITATE... TO HELP EVER...⭐ THE SENTENCE HAS MORE MEANINGFUL WHEN THE ACTIONS HAPPEN...*

UNDER THE LEADERSHIP OF OUR *ENERGETIC & GOOD HEARTED GS, SRI.G V MANIMARAN,*


Our Canpals are actively engaging themselves in helping the poor, needy, health workers, sanitation workers, police officials and above all our   
customers in the best way in throughout the country.

In *Trichy Region our RS, RAJAGOPAL R has done in excellent way and engaged him in regular social activities to help all.*


Today, our *CBOA, TEAM TRICHY has extended another step to help Police officials. We handed over sizable number of Masks, Gloves and Sanitizers to TRICHY DIG,               Sri. V. BALAKRISHNAN, IPS in his office.*

*SRI.V BALAKRISHNAN, IPS had welcomed  our office bearers and expressed his sincere thanks to our GS. He remembered his great memories with our GS, GVM and convey his best wishes to TEAM TRICHY for our social activities in this pandemic.*

Friends, we sincerely express our thanks to our  canpals who had voluntarily contributed to COVID -19 relief measures.
1. Sri. Rajasekar, Trichy Collectorate.
2. Smt. Manonmani, RO.
3. Sri. Swaminathan, Thirumanthurai.
4. Sri.Dharmaraj, RO.
5. Sri. Suresh, Perambalur CC.
6. Sri. R Arivazhagan, RO.

*DEVOTED TO HELP ALL*

*CBOA ZINDABAD*
*GVM ZINDABAD*

THIAGARAJAN L
DS, CBOA, TRICHY.
On Monday, April 20, 2020 by Tamilnewstv in    
*மே- 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்*

திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள

 1. *புத்தூர்* ( _அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில்_ ),
 2. *தென்னூர் உழவர் சந்தை* ,
3. *உறையூர் சாலை ரோடு* ,
4. *ஜங்சன் ராக்கின்ஸ் சாலை* ,
5. *கல்கண்டார்கோட்டை* ,
6. *அரியமங்கலம் ஜெகநாதபுரம்*

ஆகிய 6 இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில், வரும் மே 3-தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான தொகையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் இன்று வழங்கினார்.
On Monday, April 20, 2020 by Tamilnewstv in    
*காவலர்களுக்கு கொரோனா சோதனை*

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த 19 பேர், ஊர்க்காவல் படையை சேர்ந்த 6 பேர் என 25 பேருக்கு இன்று நடத்தப்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே  11 பேருக்கு நேற்று இச்சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
On Monday, April 20, 2020 by Tamilnewstv in    

                     

திருச்சி கொரோனா தொற்று பாதிப்பினால் இறந்த மருத்துவர்களை பொதுமக்கள்  யாரும் இழிவு செய்ய வேண்டாம் திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி

                         


திருச்சி மகப்பேறு மருத்துவர் ரொஹையா தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவர் மனவேதனையுடன் கூறியபொழுது
கொரானா தொற்று என்பது ஒரு போராக நடந்து வருகிறது.

மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறீர்கள் அது எங்களுக்கு தேவை இல்லை ஒவ்வொரு மனிதனும் நாம் இறக்கும் பொழுது இறுதியாத்திரை அவர்களுடைய மத சடங்குகள் படி நடக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் நேற்று நரம்பியல் நிபுணர் ஒருவர் இறந்தார் அவர் பல விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி உள்ளார். ஒரு நபர் ஏதோ ஒரு விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்ததில்  கொரோனா தொற்று பாதிப்பு அடைந்துள்ளது அந்த பாதிப்பினால் நரம்பியல் மருத்துவர் இறந்து போனார் .

அவரை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் பொதுமக்கள் கூடி அவரை புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கொண்டுபோன அமரர் ஊர்தியை அடித்து உடைத்துள்ளனர்.ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துள்ளனர் இப்படியெல்லாம் செய்வது நீங்கள் மருத்துவருக்கு செய்யக்கூடிய மரியாதையா நீங்கதான் எங்களை காப்பாற்ற கூடியவர் நீங்கள் தான் கடவுள் போன்றவர் என்று கூறும் மக்கள் இப்படி ஒரு மருத்துவரின் இறுதி சடங்கில் இப்படிப்பட்ட செயல்கள் செய்துள்ளது மனதுக்கு வேதனை அளிக்கிறது.

நானும் கடந்த மாதம் ஏழு பிரசவங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளேன் ஒருவேளை அதைப் போன்ற தொற்று என்னையும் பாதித்தால் எனக்கும் இந்த நிலை தானே இது எல்லாம் நினைக்கும் பொழுது மருத்துவர்கள் வேலைக்கு வருவது பற்றி யோசித்தால் மக்களின் நிலை என்ன ஆவது?

மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவது மிகவும் கவலை அளித்து வருகிறது.

இதுநாள் வரை 12  மருத்துவர்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் தொற்று பாதிப்பு அடைந்தவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கும்போது எங்களுக்கும் இந்த பாதிப்பு வரும் என்பது எங்களுக்கு தெரியும்,
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்கள் மேற்கொள்ளும் பொழுது நாங்கள் மருத்துவமனைக்கு வர மாட்டோம் என்று மருத்துவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மக்களின் நிலை என்ன
மருத்துவர் இறந்துவிட்டால் அவரை மயானத்தில் இறுதி சடங்கு செய்ய பொதுமக்கள் அனுமதி அளியுங்கள் 
அவரவர்கள் மதத்தின் படி இறுதி சடங்குகள் மேற்கொள்ள வழிவிடுங்கள் மருத்துவர்கள் நாங்கள் எதற்கு என்று ஒதுங்கிக் கொண்டாள் மக்களின் நிலை மிகவும் மோசம் அடையும் அதனை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் மருத்துவர்களின் இறப்பின் பொழுது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுமக்கள் யாரும் நடக்க வேண்டாம் என்று மருத்துவர் ரொஹையா மன வேதனையுடன் தெரிவித்தார்

Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    

*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்*

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்கோவில்களிலும் ஆலய தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் உலக புகழ் பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலும் கடந்த 20.3.2020 முதல் பக்தர்களின் தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவும் கொரோனா தாக்கத்தினால் ரத்து செய்யப்பட்டது.


 இந்நிலையில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 4.4.2020 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் சிறப்பு பூஜைகளும் மின்சாதனம் தொடர்புடைய பெண் தொழிலதிபரும் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர்  பழனிவேல் என்பவரின் மனைவியும் அரசின் உத்தரவை மதிக்காமல் தடையை மீறி திருக்கோவில் உள்ளே நடைபெற்ற பூஜைகளில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது,

 சமயபுரம் சுறியுள்ள  கிராமத்தினரும், உள்ளூர் ஆன்மீகவாதிகளும் மிகுந்த வேதனையும் பெரும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பூஜையில் கலந்து கொண்ட அன்று திருக்கோவிலில் உள்ள தனியார் முதன்மை காவலர்களும் கோவில் அர்ச்சகர்களும் எவ்வளவு தடுத்தும் கூட கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் அவர்கள் அனைவரையும் மிரட்டி தகாத வார்த்தைகள் கூறி திருக்கோயிலின் பின்வாசல் வழியாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருக்கோவிலில் உள்ள பின்வாசல் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆலய கருவறை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வீடியோ பதிவுகளை ஆராய்ந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

திருக்கோவிலில் நடந்த இத்தகைய சம்பவங்கள் பற்றி கோவில் இணை ஆணையர் அசோக்குமார் அவர்களுக்கும்  தெரியும் எனவும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 அரசின் உத்தரவை மதிக்காமல் தனிநபரின் விருப்பத்தின் பேரில் ஆலய விதிகளை மீறி செயல்பட்ட சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர்  பழனிவேல் அவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் முக்கிய சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த வகையில் 

திருச்சி ஜெயில் பேட்டை பாலக்கரை சிவாஜி சிலை சுற்றியுள்ள ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு கை தெளிப்பான் மற்றும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமிநாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமி நாசினி  தெளித்தார். 

பின்னர் நம்பர் ஒன் டோல்கேட் அருகே தங்கியுள்ள திருநங்கைகளை சந்தித்து அவர்களுக்கு இலவசமாக உணவு சமைக்கும் பொருட்கள் மற்றும் ரொட்டி போன்றவைகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருநங்கைகளுக்கு வழங்கினார் 


மேலும் அவர்களின்  குறைகளை கேட்டு அறிந்தார் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களை திருநங்கைகள் வாழ்த்தி அனுப்பினார்
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி

(சமூக இடைவெளி இல்லாமல்  அரசு உத்தரவை மீறி  புகைப்படத்தில் கிராமியப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் சரவணன் இலுப்பூர் ராசப்பா டாப் 5  லீடர்கள் என்று இவர்களால் அழைக்கப்படும் இளங்கோவன் அறிவுமணி பால்ராஜ் பாபு சாகுல் மற்றும் இவர்களுடன் எல்பின் உரிமையாளர்கள் அழகர்சாமி என்கிற ராஜா அவரது சகோதரர் ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ்)



இந்தியாவிலும் தமிழகத்திலும் மத்திய மாநில அரசுகள் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன எடுத்துவரும் நடவடிக்கைகளில் தனித்திருக்க வேண்டும் சமூக இடைவெளி வேண்டும் வீட்டில் இருந்து வெளியில் அவசியமில்லாமல் வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

ஆனால் தொடர்ச்சியாக பொதுமக்களை ஏமாற்றி வரும் எல் பின் நிறுவனம் பல ஊர்களில் தன்னுடைய கை வரிசை களை காட்டிவிட்டு தற்போது திருச்சியில் மையமாக போலி நிறுவனத்தை நடத்தி வருகிறது பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இவர்கள் அறிவித்ததை பூர்த்தி செய்யாமல் இருந்ததால் இவர்களுடன் ஏமாற்றத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் இவர்களை விட்டு பலர் வெளியில் விலகி சென்றுள்ளனர் 

இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து கிராமியப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் என்ற நபரை புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் சரவணன் இலுப்பூர் ஐ சேர்ந்த ராசப்பா இவர்களில் டாப் லீடர் களான இளங்கோவன் அறிவுமணி பால்ராஜ் பாபு சாகுல் மற்றும் பல நபர்களுடன் சமூக இடைவெளி இல்லாமல் அரசு கூறிய விதிமுறைகளை மீறி ஊரை விட்டு ஊர் வந்து ராஜா என்கிற அழகர்சாமி சகோதரர் ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ் கையை குலுக்கி சால்வை அணிவித்தும் புகைப்படம் எடுத்து குரூப்பில் பதிவிட கின்றனர் 

மேலும் இவர்கள் துபாய் சென்று வந்த போது சமூக இடைவெளி பின்பற்றாமல் ஏழை எளிய மக்களுக்கு கையுறை அணியாமல் மாஸ்க் அணியாமல் அன்னதானத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதை நாம் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் நம் செய்தியின் வெளிப்பாடாக இவர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.

அதன் பின்னர் மேலும் சில நாட்கள் கழித்து  தனது வீட்டில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தருவதாக கூறி பொது மக்களை கூட்டம் கூட்டி உள்ளனர் 

தங்களுடைய நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுடன் ஆட்கள் கூட்டமாக காணப்பட்டது அங்கு வசிக்கும் நபர்களால்  சரக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையால் விரட்டப்பட்டனர் சுற்றியிருந்த நபர்கள் அனைவரும் கொரோனா அச்சத்துக்கு உள்ளாகினர். 

மேலும் இவர்களை  தினமும் பல மாவட்டங்களிலிருந்து இவர்களை சந்திக்க பல நபர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அரசு பல விதிமுறைகளை விதித்து இருந்தும் இவர்கள் வழிமுறையை பின்பற்றாமல் இவர்கள் நடப்பது அரசை அவமானப்படுத்துகிறார்களா  இல்லை அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நடக்க வேண்டும் என்று அரசை எதிர்க்கிறார்களா?  என்பது கேள்விக்குறியாக உள்ளது?
  
 மேலும் இத்தகைய செயல்களினால் தொற்று உள்ள நபர் யாராவது பல ஊர்களில்  இருந்து வரும்பொழுது வந்து செல்லும் பொழுது தொற்று பரவினால்
 அரசுக்கு இது ஒரு பெரிய தலைவலியாக அமையக்கூடும். 

இவர்களுக்கு மட்டும் தனி சட்டமா இவர்களுக்கு யார் இந்த உரிமையை சலுகையை அளித்தனர் அரசா அரசு அதிகாரிகளா? எந்த அரசு எந்த அதிகாரிகள்? என்று தெரியவில்லை? ஒருவேளை மக்கள் அரசரா??🤔

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தபோது தொற்று பரவாமல் இருக்க வீடியோ கான்பரன்சில் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்படி இருக்கும்போது எல் பின் சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கு எப்படி இந்த தைரியம் என்று தெரியவில்லை?

இவர்கள் செயல் தொடருமா தமிழக அரசால் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம் ?






தொடர் மக்கள் சேவையில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர்கள் விதிமுறைகளை பின்பற்றும் படம்


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி திருச்சியை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது சமூக இடைவெளிவிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது