Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    



சரக்குகள்-சேவை வரி சட்டத் திருத்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அருண் ஜேட்லிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் 3 ஆம் தேதி தங்களிடம் நான் நேரில் அளித்த மனுவில், உத்தேசிக்கப்பட்டுள்ள சரக்குகள்-சேவை வரி தொடர்பாக, தமிழகம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

இதையடுத்து, சரக்குகள்-சேவை வரி தொடர்பான திருத்தப்பட்ட அரசியல் சட்ட வரைவு மசோதாவைக் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இதில் இந்த வரைவு மசோதாவில், தாம் தெரிவித்திருந்த சில முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற மாநில நிதியமைச்சர்களின் மாநாட்டில், சரக்குகள்-சேவை வரி மீதான வரையறை ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருப்பது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கலப்புத் திட்டத்துக்கான வரையறை ஒரு சதவீத அடிப்படை வட்டியுடன் ரூ.50 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

0 comments: