Friday, September 19, 2014
சென்னை கடற்கரை பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 7.45 மணிக்கு கடற்கரையை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக கடலோர காவல் படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.
மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.
மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment