Friday, September 19, 2014
சென்னை கடற்கரை பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 7.45 மணிக்கு கடற்கரையை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக கடலோர காவல் படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.
மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.
மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...

0 comments:
Post a Comment