Friday, September 19, 2014
சென்னை கடற்கரை பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 7.45 மணிக்கு கடற்கரையை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக கடலோர காவல் படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.
மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.
மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment