Monday, September 01, 2014
ஊராட்சி துணைத் தலைவிக்கு காசோலையில்
கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த
உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மல்லபுரம் ஊராட்சி துணைத் தலைவி மலர்விழி தாக்கல் செய்த மனு விவரம்:
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த பயனாளிகள் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றதாக என் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் எனது கணவர் உள்ளிட்டோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். என் மீதான குற்றசாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, மன்ற தீர்மானத்தை ரத்து செய்து, ஆட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், அதே நாளில் அதிகாரத்தை பறித்துள்ள செயல் சட்டத்தை மீறியதாகும்.
எனவே, இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த ஆட்சியரின் உத்தரவும், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மல்லபுரம் ஊராட்சி துணைத் தலைவி மலர்விழி தாக்கல் செய்த மனு விவரம்:
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த பயனாளிகள் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றதாக என் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் எனது கணவர் உள்ளிட்டோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். என் மீதான குற்றசாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, மன்ற தீர்மானத்தை ரத்து செய்து, ஆட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், அதே நாளில் அதிகாரத்தை பறித்துள்ள செயல் சட்டத்தை மீறியதாகும்.
எனவே, இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த ஆட்சியரின் உத்தரவும், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment