Monday, September 29, 2014
சென்னையில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் நேற்று வழக்கம்போல இயங்கியது.
தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆங்காங்கே சாலை மறியல், கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறியது.
இதனையடுத்து வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ‘டாஸ்மாக்’ கடைகள் என எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், முக்கியமான பொது இடங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகளும் திறக்கப்பட்டிருந்தன. எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாஸா உள்ளிட்ட சில வணிக வளாகங்களில் சில கடைகள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான சினிமா அரங்குகளில் போலீசார் பாதுகாப்புடன் காட்சிகள் இயக்கப்பட்டன.
சென்னை தியாகராயநகர், அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற கடைகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. முக்கியமான பொழுதுபோக்கு பூங்காக்கள், கோவில் கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நேற்று அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.அம்மா உணவகத்தில் கூட்டம்
நகரின் பெரும்பாலான இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் நேற்று ‘அம்மா உணவகங்களில்’ மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கமான நேரத்தினை காட்டிலும் அம்மா உணவங்களில் வேகமாகவே உணவு வகைகள் விற்றுத்தீர்ந்தன.
மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் உள்பட பல இடங்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலுக்கு பிறகு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. காலை முதல் காத்துக்கிடந்த பயணிகள், பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியுடன் தங்கள் ஊர்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
இதேபோல், சென்னை- பெங்களூருக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பஸ்கள் எந்த வித தடையும் இன்றி செல்ல தொடங்கின. அதே போல், கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. தனியார் ஆம்னி பஸ்கள் நேற்று பிற்பகலுக்கு பிறகு, பெங்களூருக்கு இயங்கத்தொடங்கியது.
தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆங்காங்கே சாலை மறியல், கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறியது.
இதனையடுத்து வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ‘டாஸ்மாக்’ கடைகள் என எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், முக்கியமான பொது இடங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகளும் திறக்கப்பட்டிருந்தன. எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாஸா உள்ளிட்ட சில வணிக வளாகங்களில் சில கடைகள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான சினிமா அரங்குகளில் போலீசார் பாதுகாப்புடன் காட்சிகள் இயக்கப்பட்டன.
சென்னை தியாகராயநகர், அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற கடைகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. முக்கியமான பொழுதுபோக்கு பூங்காக்கள், கோவில் கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நேற்று அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.அம்மா உணவகத்தில் கூட்டம்
நகரின் பெரும்பாலான இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் நேற்று ‘அம்மா உணவகங்களில்’ மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கமான நேரத்தினை காட்டிலும் அம்மா உணவங்களில் வேகமாகவே உணவு வகைகள் விற்றுத்தீர்ந்தன.
மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் உள்பட பல இடங்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலுக்கு பிறகு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. காலை முதல் காத்துக்கிடந்த பயணிகள், பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியுடன் தங்கள் ஊர்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
இதேபோல், சென்னை- பெங்களூருக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பஸ்கள் எந்த வித தடையும் இன்றி செல்ல தொடங்கின. அதே போல், கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. தனியார் ஆம்னி பஸ்கள் நேற்று பிற்பகலுக்கு பிறகு, பெங்களூருக்கு இயங்கத்தொடங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment