Wednesday, September 03, 2014
திருப்பூர் : வங்கி கடன் பெற்றுத் தருவதாக, மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் மோசடி செய்த பெண் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் ஸ்டேஷனை பெண்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், பெங்களூருவில் உள்ள 'நேத்ரா மைக்ரோ பைனான்ஸ்' மூலம், தொழில் துவங்க கடன் பெற்றுத்தருவதாக, லட்சுமி நகரை சேர்ந்த சாந்தி, 45, கூறியுள்ளார். சில குழுவினருக்கு கடன் பெற்றுக்கொடுத்துள்ளார்.புதிய குழுக்கள் துவங்கி, அக்குழு உறுப்பினர்களிடம் டிபாசிட் மற்றும் கமிஷன் பெற்ற சாந்தி, நீண்ட நாட்களாகியும் கடன் பெற்றுத் தரவில்லை. போஸ்ட் ஆபீசில் குழு உறுப்பினர்கள் பெயரில் துவங்கிய தொடர் வைப்பு நிதி பணத்தையும் மோசடி செய்துள்ளார்.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்த அவர் மீது, கடந்த மாதம் 14ம் தேதி, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் குழுவினர் புகார் அளித்தனர். இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, நேற்று காலை மகளிர் குழுவினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட சாந்தியிடம் இருந்து தொகையை பெற்றுத்தர வேண்டும். வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி, வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்த இன்ஸ்பெக்டர், உடனடியாக, போலீசாரை சாந்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் இல்லை என தெரியவந்தது.
மகளிர் குழுவினர் கூறுகையில், 'நாளை (இன்று) காலை 11.00 மணிக்கு மீண்டும் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். திருப்திகரமான நடவடிக்கை எடுக்காவிட்டால், போலீசாரை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம்' என்றனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், பெங்களூருவில் உள்ள 'நேத்ரா மைக்ரோ பைனான்ஸ்' மூலம், தொழில் துவங்க கடன் பெற்றுத்தருவதாக, லட்சுமி நகரை சேர்ந்த சாந்தி, 45, கூறியுள்ளார். சில குழுவினருக்கு கடன் பெற்றுக்கொடுத்துள்ளார்.புதிய குழுக்கள் துவங்கி, அக்குழு உறுப்பினர்களிடம் டிபாசிட் மற்றும் கமிஷன் பெற்ற சாந்தி, நீண்ட நாட்களாகியும் கடன் பெற்றுத் தரவில்லை. போஸ்ட் ஆபீசில் குழு உறுப்பினர்கள் பெயரில் துவங்கிய தொடர் வைப்பு நிதி பணத்தையும் மோசடி செய்துள்ளார்.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்த அவர் மீது, கடந்த மாதம் 14ம் தேதி, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் குழுவினர் புகார் அளித்தனர். இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, நேற்று காலை மகளிர் குழுவினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட சாந்தியிடம் இருந்து தொகையை பெற்றுத்தர வேண்டும். வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி, வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்த இன்ஸ்பெக்டர், உடனடியாக, போலீசாரை சாந்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் இல்லை என தெரியவந்தது.
மகளிர் குழுவினர் கூறுகையில், 'நாளை (இன்று) காலை 11.00 மணிக்கு மீண்டும் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். திருப்திகரமான நடவடிக்கை எடுக்காவிட்டால், போலீசாரை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம்' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment