Wednesday, September 03, 2014
திருப்பூர் : வங்கி கடன் பெற்றுத் தருவதாக, மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் மோசடி செய்த பெண் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் ஸ்டேஷனை பெண்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், பெங்களூருவில் உள்ள 'நேத்ரா மைக்ரோ பைனான்ஸ்' மூலம், தொழில் துவங்க கடன் பெற்றுத்தருவதாக, லட்சுமி நகரை சேர்ந்த சாந்தி, 45, கூறியுள்ளார். சில குழுவினருக்கு கடன் பெற்றுக்கொடுத்துள்ளார்.புதிய குழுக்கள் துவங்கி, அக்குழு உறுப்பினர்களிடம் டிபாசிட் மற்றும் கமிஷன் பெற்ற சாந்தி, நீண்ட நாட்களாகியும் கடன் பெற்றுத் தரவில்லை. போஸ்ட் ஆபீசில் குழு உறுப்பினர்கள் பெயரில் துவங்கிய தொடர் வைப்பு நிதி பணத்தையும் மோசடி செய்துள்ளார்.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்த அவர் மீது, கடந்த மாதம் 14ம் தேதி, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் குழுவினர் புகார் அளித்தனர். இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, நேற்று காலை மகளிர் குழுவினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட சாந்தியிடம் இருந்து தொகையை பெற்றுத்தர வேண்டும். வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி, வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்த இன்ஸ்பெக்டர், உடனடியாக, போலீசாரை சாந்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் இல்லை என தெரியவந்தது.
மகளிர் குழுவினர் கூறுகையில், 'நாளை (இன்று) காலை 11.00 மணிக்கு மீண்டும் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். திருப்திகரமான நடவடிக்கை எடுக்காவிட்டால், போலீசாரை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம்' என்றனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், பெங்களூருவில் உள்ள 'நேத்ரா மைக்ரோ பைனான்ஸ்' மூலம், தொழில் துவங்க கடன் பெற்றுத்தருவதாக, லட்சுமி நகரை சேர்ந்த சாந்தி, 45, கூறியுள்ளார். சில குழுவினருக்கு கடன் பெற்றுக்கொடுத்துள்ளார்.புதிய குழுக்கள் துவங்கி, அக்குழு உறுப்பினர்களிடம் டிபாசிட் மற்றும் கமிஷன் பெற்ற சாந்தி, நீண்ட நாட்களாகியும் கடன் பெற்றுத் தரவில்லை. போஸ்ட் ஆபீசில் குழு உறுப்பினர்கள் பெயரில் துவங்கிய தொடர் வைப்பு நிதி பணத்தையும் மோசடி செய்துள்ளார்.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்த அவர் மீது, கடந்த மாதம் 14ம் தேதி, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் குழுவினர் புகார் அளித்தனர். இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, நேற்று காலை மகளிர் குழுவினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட சாந்தியிடம் இருந்து தொகையை பெற்றுத்தர வேண்டும். வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி, வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்த இன்ஸ்பெக்டர், உடனடியாக, போலீசாரை சாந்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் இல்லை என தெரியவந்தது.
மகளிர் குழுவினர் கூறுகையில், 'நாளை (இன்று) காலை 11.00 மணிக்கு மீண்டும் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். திருப்திகரமான நடவடிக்கை எடுக்காவிட்டால், போலீசாரை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம்' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment