Thursday, October 16, 2014
திருப்பூரில் பயணிகளிடம் அரசு விதிமுறைக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக நி்ர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருப்பூரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் நகர, புறநகரப் பேருந்துகள் அனைத்தும் எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் என அறிவித்து சாதாரண பேருந்துகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களுக்கு மாறாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் கடிதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் விதிமுறைக்குப் புறம்பான கட்டண உயர்வை கைவிட போக்குவரத்து நிர்வாகம் தயாராக இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரியதிலும் சாமானியப் பேருந்துகளுக்கு மாறாக விரைவுப் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கவில்லை என்ற விபரமும் தெரியவந்தது.
எனவே எந்த வகையிலும் நியாயம் இல்லாத வகையில், திருப்பூரில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களிடம் பகற்கொள்ளை போல கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். அரசு விதிமுறைப்படி சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
புதன்கிழமை மாலை திருப்பூர் அவிநாசி சாலையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர். கட்சி அணியினர், பேருந்து பயனாளிகள் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment