Wednesday, December 24, 2014
மதுரை-நெல்லை-தூத்துக்குடி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து
சோதனை அடிப்படையில் மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்கள் இயக்கப்பட்டு
வருகின்றன.இந்நிலையில், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் ரெயில்களை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ளன.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஓம் பிரகாஷ் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை-தூத்துக்குடி-நெல்லை ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்குவதற்கு பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் கொடுத்துள்ளார். எனவே, வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதன்படி, நெல்லை-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12631/ 12632), திருவனந்தபுரம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16723/16724), கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 12633/12634), தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 12693/12694), திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22627/22628), குருவாயூர்-தூத்துக்குடி சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16127/16128) ஆகிய ரெயில்கள் வருகிற 29–ந்தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதேபோல, நெல்லை, தூத்துக்குடி, மதுரை ரெயில் பாதையில் இயக்கப்படும் 10 வாராந்திர மற்றும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
0 comments:
Post a Comment