Wednesday, December 24, 2014

இந்நிலையில், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் ரெயில்களை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ளன.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஓம் பிரகாஷ் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை-தூத்துக்குடி-நெல்லை ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்குவதற்கு பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் கொடுத்துள்ளார். எனவே, வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதன்படி, நெல்லை-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12631/ 12632), திருவனந்தபுரம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16723/16724), கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 12633/12634), தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 12693/12694), திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22627/22628), குருவாயூர்-தூத்துக்குடி சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16127/16128) ஆகிய ரெயில்கள் வருகிற 29–ந்தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதேபோல, நெல்லை, தூத்துக்குடி, மதுரை ரெயில் பாதையில் இயக்கப்படும் 10 வாராந்திர மற்றும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று...
0 comments:
Post a Comment