Wednesday, December 24, 2014
மதுரை-நெல்லை-தூத்துக்குடி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து
சோதனை அடிப்படையில் மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்கள் இயக்கப்பட்டு
வருகின்றன.இந்நிலையில், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் ரெயில்களை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ளன.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஓம் பிரகாஷ் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை-தூத்துக்குடி-நெல்லை ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்குவதற்கு பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் கொடுத்துள்ளார். எனவே, வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதன்படி, நெல்லை-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12631/ 12632), திருவனந்தபுரம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16723/16724), கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 12633/12634), தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 12693/12694), திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22627/22628), குருவாயூர்-தூத்துக்குடி சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16127/16128) ஆகிய ரெயில்கள் வருகிற 29–ந்தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதேபோல, நெல்லை, தூத்துக்குடி, மதுரை ரெயில் பாதையில் இயக்கப்படும் 10 வாராந்திர மற்றும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment