Monday, December 22, 2014
உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் "செக்ஸ் டார்ஷன்" என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோசடி அடிப்படையில் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பது. இதன் முதற்கட்டம் என்பது சமூக வலைத்தளங்களின் மூலம் ஆண்களை வசீகரித்து இழுப்பது. பிறகு அவர்களை அவர்களின் குடும்பத்தவர் மற்றும் நண்பர்களிடம் காட்டிக்கொடுப்பேன் என்று மிரட்டி பணம் பறிப்பது.
இப்படி பணம் பறிக்கும் கும்பல்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கின்றன. சமீபகாலத்தில் இது ஒரு பெருந் தொழிலாகவே வளர்ந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருக்கும் குடிசைகள் இந்த இணையவழி மிரட்டல் பணம் பறிக்கும் குற்றக் கும்பல்களின் தலைமையகமாக மாறிவருவதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்த மோசடிப்பேர்வழிகள் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களை கறக்கிறார்கள். இப்படி செயற்படும் இணைய மிரட்டல் கும்பல்களை சமீபத்தில் இணைய மோசடிகளைக் கண்டுபிடிக்கும் காவல்துறையினர் சோதனை செய்தபோது இதற்காக முழுநேர வேலையில் இளம் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் என்று ஏதோ தொழிற்சாலை பணியாளர்களைப்போல இவர்கள் வேலை செய்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
ஸ்ரீரங்கத்தில் இன்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை ந...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment