Monday, December 22, 2014
உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் "செக்ஸ் டார்ஷன்" என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோசடி அடிப்படையில் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பது. இதன் முதற்கட்டம் என்பது சமூக வலைத்தளங்களின் மூலம் ஆண்களை வசீகரித்து இழுப்பது. பிறகு அவர்களை அவர்களின் குடும்பத்தவர் மற்றும் நண்பர்களிடம் காட்டிக்கொடுப்பேன் என்று மிரட்டி பணம் பறிப்பது.
இப்படி பணம் பறிக்கும் கும்பல்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கின்றன. சமீபகாலத்தில் இது ஒரு பெருந் தொழிலாகவே வளர்ந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருக்கும் குடிசைகள் இந்த இணையவழி மிரட்டல் பணம் பறிக்கும் குற்றக் கும்பல்களின் தலைமையகமாக மாறிவருவதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்த மோசடிப்பேர்வழிகள் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களை கறக்கிறார்கள். இப்படி செயற்படும் இணைய மிரட்டல் கும்பல்களை சமீபத்தில் இணைய மோசடிகளைக் கண்டுபிடிக்கும் காவல்துறையினர் சோதனை செய்தபோது இதற்காக முழுநேர வேலையில் இளம் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் என்று ஏதோ தொழிற்சாலை பணியாளர்களைப்போல இவர்கள் வேலை செய்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி செமப்புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45) கொத்தனார். இவருடைய மனைவி பரமேசுவரி (32). இவர்களுக்கு அஜித் (1...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
0 comments:
Post a Comment