Sunday, December 21, 2014
திருப்பூர் கொங்குமெயின் ரோடு எம்.எஸ்.நகர், கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திண்டுக்கல் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் கருத்தராஜா(வயது 42). இவர் தனது மனைவி மகேஷ்வரியின் பெயரில் திருப்பூர் கொங்கு ரோடு எம்.எஸ்.நகரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன்மூலம், ஏலச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு போன்றவை நடத்தி வந்ததுடன், அவற்றின் மூலம் 200–க்கும் மேற்பட்ட மக்களிடம் பல லட்சம் பணம் வசூலித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த நிதி நிறுவனம் திறக்கப்படாமல் உள்ளது. கருத்தராஜா, மகேஷ்வரி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். எனவே 2 பேரையும் பிடித்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
0 comments:
Post a Comment