Wednesday, January 28, 2015
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ்
சரகத்துக்குட்பட்ட தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன்
(வயது35), ராணுவவீரர். இவரது மனைவி கோமதி (28). குடும்ப பிரச்சினை காரணமாக
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு
கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில் தொட்டியபட்டியில் கோமதியின் பெரியப்பா பொன்னையாவின் பேரன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கோமதி தனது தந்தை சின்னச்சாமி, தாய் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோருடன் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த கமலக்கண்ணனுக்கும், கோமதிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் அவரது சகோதரர் பரமசுந்தரம் ஆகியோர் கோமதி, சின்னச்சாமி, ராமுத்தாய் உள்பட 5 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கொடூரமாக கொன்ற கமலக்கண்ணன், பரமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்த இவர்களின் தாயார் சுப்புலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்து உசிலம்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். நீதிபதி கிறிஸ்டின்பபிதா, கொலையாளிகள் 3 பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி கமலக்கண்ணன், பரமசுந்தர் ஆகியோர் மதுரை சிறையிலும், சுப்புலெட்சுமி திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து சின்னச்சாமியின் மகன் தங்கப்பாண்டி, மருமகன் முத்து (கொலை செய்யப்பட்ட பாக்கியலட்சுமியின் கணவர்) ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரின் உடல்கள் மங்கல்ரேவு சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் திடீரென பிணங்களை எரிக்க விடாமல் முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறாகள். ஆனால் இதுவரை யாரும் ஆறுதல் கூட தெரிவிக்கவரவில்லை என்று ஆவேசத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த போலீஸ் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment