Tuesday, March 31, 2015

On Tuesday, March 31, 2015 by Unknown in ,    

தமிழகத்தில் தான் பொது விநியோக துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் சில நியாய விலை கடை பணியாளர்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர் .எடுத்துக்காட்டாக விருதுநகர் மாவட்டம் ரயில்வே பீடர் ரோடு -1 பகுதியில் உள்ள கடை A O001 ல் உள்ள பணியாளர் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் கார்டு தாரர்கள் பொருட்களை வாங்கிவிட்டு தங்களது ரேசன் கார்டை மறந்து விட்டு சென்று விட்டால் அந்த ரேசன் கார்டை எடுத்து வைத்துக் கொள்ளும் இவர் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களை அ
ரேசன் கார்டை மறந்தால் 1000 ரூபாய் அபராதம் :கூட்டுறவு துறை அமைச்சர் கவனிப்பாரா ??லைய விடுவதோடு அவர்களிடம் 1000 ரூபாய் அபராதமாக தனக்கு தந்தால் மட்டுமே கார்டை திருப்பி தருவேன் என கூறுகிறார் .1000 ரூபாய் தர மறுக்கிற பட்சத்தில் ரேசன் பொருட்களை தருவதற்கு மறுக்கிறார் .இதனால் இப்பகுதி நுகர்வோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் .இது பற்றிய புகார்களை யாரிடம் அளித்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தொடர்ந்து இதே போன்ற நூதன முறையில் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது நியாய விலைக்கடைகள் அநியாய விலைக்கடைகளாக மாறலாமா ?இதில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்

0 comments: